Theni

News September 7, 2024

தேனி அருகே மன வேதனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

தேனி முத்துத்தேவன்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி. இவர் கணவர் செல்வம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்நிலையில் மலர்கொடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக அவருக்கு வலி அதிகரித்தது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று (செப்.6) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை.

News September 6, 2024

தேனியில் புகைப்படக் கண்காட்சி

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏத்தக்கோவில் ஊராட்சியில் இன்று(செப்.06) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள்,
சாதனைகள் குறித்த புகைபபடக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, செய்தி மக்களும் தொடர்புத்துறை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

News September 6, 2024

சினை பிடிக்காத பசுவிற்கு சிகிச்சை மூலம் பால் உற்பத்தி

image

தேனி மாவட்டத்தில் உள்ள பசு இனங்களுக்கு சினை பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டால் விவசாயிகள் அதனை கேரளாவிற்கு அடிமாடாக அனுப்பி விடுகின்றனர். அவ்வாறு சினைப்பிடிக்காமல் இருக்கும் பசுக்களை தேனியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தால் 2 மாதங்களில் சிகிச்சை அளித்து குணப்படுத்தி, பால் உற்பத்திக்கு உத்திரவாதம் வழங்கப்படும். இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தகவல்.

News September 6, 2024

முதன் முறையாக 55 அடியாக உயர்ந்து சாதனை

image

தேவதானப்பட்டி அருகே 7.கி.மீ தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. மஞ்சளாறு அணையில் 1967 ல் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறந்து 57 ஆண்டுகளில் முதன்முறையாக வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே கடந்த ஜூன்.20 முதல் நேற்று (செப்.5) வரை தொடர்ந்து 78 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்து நிலை நிறுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

News September 5, 2024

தாட்கோ மூலம் 90 சதவீத மானியத்தில் வீடுகள்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் வீடுகள் பெறும் ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 5, 2024

பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

image

2020ல் தோழியருடன் தெருவில் விளையாடிய சிறுமியிடம் மிட்டாய் கொடுத்து நடராஜன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமியை நடராஜன் அழைத்து சென்ற விபரத்தை மற்ற சிறுமிகள் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் நடராஜன் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் நடராஜனுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News September 4, 2024

விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 

image

விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்பொது நலிந்த நிலையிலுள்ள தேனி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.30 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

ஹரியானா  வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

தேனி அருகே சிந்தலைச்சேரி அருள் பிரகாஷ் (27) என்பர் கார் பரிசு விழுந்ததாக கூறி  ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். பிறகு இது தொடர்பாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரோகித்குமாரை(27) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் தேனி மாவட்ட சிறையில் இருந்து அவரை மதுரை சிறைக்கு இன்று மாற்றம் செய்தனர்.

News September 4, 2024

தேனி மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

தமிழக அரசின் மூலம் ஆண்டுதோறும் சிறந்து சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் சிறந்த கல்வி பணியாற்றிய ஆசிரியர்கள் வேலுச்சாமி, மகேஸ்வரி, ராமநாதன், முத்தழகு, பூரணசெல்வி, ஜோ.கண்ணன், சரவண ஶ்ரீ, சாந்தி, ரெ.கண்ணன் ஆகிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

தேனி மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

தமிழக அரசின் மூலம் ஆண்டுதோறும் சிறந்து சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் சிறந்த கல்வி பணியாற்றிய ஆசிரியர்கள் வேலுச்சாமி, மகேஸ்வரி, ராமநாதன், முத்தழகு, பூரணசெல்வி, ஜோ.கண்ணன், சரவண ஶ்ரீ, சாந்தி, ரெ.கண்ணன் ஆகிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!