India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் 46,144 செம்மறியாடுகளும் 60,081 வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைத்து, ஏப் 29 முதல் மார்ச் 28 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வெண்பன்றி வகைகள் பெரிய அளவில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இத்தடுப்பூசி பணி மூன்று மாத வயதிற்கு மேல் உள்ள சினையற்ற பன்றிகளுக்கு மே 23 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது . இத்தடுப்பூசியை செலுத்துவதால் பன்றிகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.
ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி அருகே மொய் செய்யவில்லை எனக்கூறி தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜசேகரன் தனது வீட்டு முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாண்டியம்மாள் சன்னாசி உறவினர்கள் நடராஜன் தலைமலை வெள்ளைச்சாமி மற்றும் நான்கு பேர் சேர்ந்து ராஜசேகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பதிலுக்கு ராஜசேகரன் மற்றும் குடும்பத்தினரும் அவர்களை தாக்கியதால் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நேற்று தனது பைக்கில் டொம்புச்சேரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரில் பிரபு என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குணசேகரன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
தேனி கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில் பூத நாராயண கோவில் அமைந்துள்ளது. இந்த சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மக்கள் அனைவரும் வருகை வந்து தன் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அருவியில் குளித்து நீராடி செல்வது வழக்கம். தற்போது வெயிலின் அளவு அதிகரித்துள்ளதால் சுருளி அருவி வறண்டு காணப்படுகிறது.
பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூர் அருகே லோயர்கோம்பட் பகுதியில் அமைந்துள்ளது. இது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளின் விவசாயத்திற்கும், பாசன வசதிக்காகவும் முல்லை பெரியார் அணையைக் கட்டிய ஆங்கிலேயர் ஜான் பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டது. 1895ஆம் ஆண்டு ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்த அவர், வறட்சியைக் கண்டு பெரியார் ஆற்றில் பல தடைகளைத் தாண்டி இவ்வணையைக் கட்டினார்
காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மாமனாருக்கும் உறவினர் பாண்டியனுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. கணேசன் மாமனாருக்கு ஆதரவாக பேசி அவரைக் காப்பாற்ற முயன்றார். அதனால் கோபமடைந்த பாண்டியன் கையில் இருந்த அரிவாளால் கணேசனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பம் தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜமீன்தார் சக போலீசாருடன் நேற்று ரோந்து சென்றபோத கம்பம் ஆங்கூர் பாளையம் ரோடு நகராட்சி குப்பை கிடங்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விற்றுக்கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடம் இருந்த 72 லாட்டரி சீட்டுகளையும்,லாட்டரி விற்ற பணம் ரூ. 900 யும் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
தேனி பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அஜித் என்பவரை 2019-ம் ஆண்டு தேனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதைத்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் அணைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வருடம் தோறும் குண்டு சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள குண்டு சுடும் பயிற்சி தளத்தில் வருகின்ற 26.04.2024 முதல் 18.05.2024 வரை தேனி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினருக்கு குண்டு சுடும் பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.