Theni

News May 4, 2024

தேனியில் குருபூஜை விழா

image

நேற்று தேனி மாவட்டம்
கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருதி நுன்கலைப்பள்ளி சார்பாக திருநாவுக்கரசர் குருபூஜை விழா, சதங்கை விழா நடைபெற்றது.
விழாவில் மதுரை ஆதினம்
293வது பீடாதிபதி பூஜனீய ஸ்ரீலஸ்ரீஹரிஹர ஞானசம்பந்ததேசிக பரமாச்சாரியசுவாமிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

தேனி மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

தேனி நகர அமமுக நீர்மோர் பந்தல் திறப்பு

image

தேனி (வடக்கு) நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று அல்லிநகரம் பகுதியில் நீர் மோர் பந்தலை தேனி (வடக்கு) மாவட்ட செயலாளர் காசிமாயன் திறந்து வைத்து, தர்பூசணி பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு நகர செயலாளர் குரு கணேசன் தலைமை வைத்தார். கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு முன்னிலை வைத்தார். உடன் தேனி நகர பொறுப்பாளர்கள் உள்ளனர்.

News May 3, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

தேனி அருகே மதுராபுரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜக்கன். இவர் தேனி – பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மதுராபுரி விலக்கு அருகே பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் ஜக்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அல்லிநகரம் போலீசார் நேற்று (மே.2) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 2, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.இவர் நேற்று வேல்நகரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தனது உறவினர் முத்து என்பவருடன் டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து  போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 1, 2024

தேனி அருகே விபத்து: பலி

image

தேனி மாவட்டம் எஸ்பிஎஸ் காலனி அருகே தேனியை நோக்கி கனரக வாகனம் ஒன்று சென்றது. சென்ட்ரிங் சாமான்கள் ஏற்றி சென்ற லாரியின் முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News May 1, 2024

தேனி: மே 10ம் தேதி விடுமுறை

image

தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா மே 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 10ஆம் தேதி நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்விநிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

News May 1, 2024

900 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பகுதியில் இன்று காலை அல்லிநகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம் அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் (37) அரசு அனுமதியின்றி ரூ. ஒரு லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 900 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 900 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 1, 2024

தேனி: இன்று முதல் தொடக்கம்

image

மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று (மே.1) துவங்குகிறது. இதில், வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்பட 1500 வகை வண்ண பூக்கள் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. இன்று துவங்கும் இந்த கண்காட்சி மே.12 வரை நடைபெற உள்ளது. மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

News April 30, 2024

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

ஜெயமங்களம் போலீசாரால் கடந்த 2018-ம் ஆண்டு சங்கீதா என்பவரை கொலை செய்த வழக்கில் சங்கீதாவின் கணவர் மலைச்சாமி, மாமனார் ராமன், மாமியார் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணை தேனி மாவட்டம் மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பாக குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!