India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. அதி மழை காரணமாக போடி பார்க் நிறுத்தம் அருகே மழை நீரானது சாக்கடை கழிவு நீரில் கலந்து சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
பெங்களூரைச் சேர்ந்தவர் சஞ்சீவரெட்டி. இவர் தனது குடும்பத்தினருடனும் மைத்துனர் குடும்பத்தினருடனும் காரில் மூணார் சென்று நேற்று வீடு திரும்பினர். மலைப்பகுதியில் 4வது வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறிய கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சஞ்சீவரெட்டி உயிரிழந்தார். அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்- 5,71,493 வாக்குகள்
*அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன்- 2,92,669 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் V.T.நாராயணசாமி – 1,55,587 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மதன் ஜெயபால் – 76,834 வாக்குகள்
தேனி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நேற்று(ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டதில் இறுதியாக திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா வெற்றி சான்றிதழை வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் இதுவரை 4,70,036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக கூட்டணியில் உள்ள அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 2,32,019 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.