India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. மேலும், வைகை அணையில் இருந்து பாசன பகுதிக்கு விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தேனி ஓட்டு எண்ணிக்கையின் போது பணிபுரிய கண்காணிப்பாளர்கள் 96 பேர், உதவியாளர்கள் 96 பேர், நுண்பார்வையாளர்கள் 96 பேர், மின்னணு ஓட்டுகளை கணக்கிட 18 பேர், தபால் ஓட்டுகளை கணக்கீட 32 பேர் என 320 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
தேனி மாவட்டத்தில் வெளிநாடுகளில் உயர் படிப்பை பயில விரும்பும் ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் https://overseas. tribal. gov. in/ என்ற இணையதளத்தின் மூலம் 31.05.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களை https://overseas. tribal. gov. in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் எனவும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
குள்ளப்பகவுண்டன்பட்டி, பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவர், தனது மோட்டார் சைக்கிளை தனியார் தோட்டத்தின் வேலி அருகே நிறுத்தியபோது மின்சார வயரில் உராய்வு ஏற்பட்டு தூக்கி வீசப்ப்டடு உயிரிழந்தார். மேலும் எருமை மாடு ஒன்றும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மதிப்பெண் ராஷ்மிகா – 489,இரண்டாவதாக
ரக்ஷனாஸ்ரீ – 484, மூன்றாவதாக ஐஸ்வர்யா – 482,சுபர்னாதேவி – 482 ஆகிய மாணவிகளுக்கும் மற்றும் தனியார் பள்ளி மாணவி தேனி மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த நிதாஸ்ரீ – 496 ஆகியோருக்கு வளர்ச்சிக் பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றன எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முடக்கப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வுத்துறை தகவல் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை காயவைத்து பருக வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரக்கூடிய நிலையில், இன்று தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.15) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பதிவாகக்கூடும். சமீபமாகவே தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.