India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் இன்று (23.01.2026) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் இன்று (23.01.2026) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் இன்று (23.01.2026) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டிகள் 25-01-2026 அன்று நடைபெறவுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய அளவில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் (ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் -(ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து பெண்களுக்கு மட்டும்) மொத்தமாக 7 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் இம்மாதம் 24.01.26 அன்று நடைபெற உள்ளது. சுக்குவாடன்பட்டி, வடுகபட்டி, மூலக்கடை, ராமகிருஷ்ணாபுரம், இராசிங்கபுரம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 22.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெருமாள்கவுண்டன்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி A.K.K. ரஜினி, கூடுதல் பேருந்து இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான அறிக்கையை போக்குவரத்து அதிகாரிகள் இன்று நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தேனி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <

தேனியில் தீன்தயாள் உபாத்தியாய திட்டத்தின் மூலம் ட்ரோன் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் சுயதொழில் தொடங்க உதவி செய்யப்படும். மேலும், ரூ.1,270 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ள இளைஞர்கள் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.