Theni

News May 6, 2024

இளைஞா் அடித்து கொலை: தந்தை, மகன் கைது

image

சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சின்னமனூா் போலீஸாருக்கு நேற்று (மே.5) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவா் சீலையம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பதும், அவரை அவரது சித்தப்பா மலைராஜா, அவரது மகன் பவுன்ராஜா ஆகியோர் அடுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News May 5, 2024

தேனி: வீரபாண்டி கோயிலில் பலத்த காற்று

image

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் சித்திரை திருவிழா வரும் 7ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.  வீரபாண்டி முல்லை ஆற்றங்கரை ஓரத்தில் பழம் மற்றும் பூக் கடைகள் தகர கொட்டகை அமைத்து நடத்தி வருகின்றனர். இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தென்னை மரம் ஒன்று சாய்ந்து கீழே விழுந்ததில் தகர கடைகள் நொறுங்கியது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

News May 5, 2024

24 மணிநேரமும் பேருந்து வசதி

image

தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகின்ற 07.05.2024 முதல் 14.05.2024 வரை ஒரு வார காலம் நடைபெற உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் அரசு பேருந்துகள் வீரபாண்டிக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி ஷஜீவனா  தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

தேனி அருகே ஒருவர் வெட்டிக் கொலை

image

உத்தமபாளையம் அருகே வரதராஜபுரத்தை சோ்ந்தவா் சந்திரவேல்முருகன். இவரை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் என்பவரிடம் நேற்று (மே.4) விசாரணை நடத்தினா். இதில் சந்திரவேல்முருகனை அவர் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

தேனி: இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை

image

தேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போடி அருகே ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த தனவந்தன் (26). இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகமான முதலீடு செய்ய பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு, ரூ.53 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

News May 4, 2024

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

image

போடி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் போடி புதூரைச் சோ்ந்த மது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்பக் கேட்டு மது, முத்துப்பாண்டியை சாவியால் குத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதில், காயமடைந்த முத்துப்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸாா் மது மீது நேற்று (மே.3) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 4, 2024

இளைஞரை கடத்திய ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

image

தேனி பள்ளபட்டியை சோ்ந்த ராஜபிரபு (29) என்பவர் மூலம் தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் மதுரையை சேர்ந்த இராணுவ வீரரான குறலரசன் என்பவர் ரூ.6 லட்சம் பங்கு முதலீடு செய்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜபிரபுவை, குறலரசன் உள்ளிட்ட 4 போ் வழிமறித்து வேனில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் குறலரசன் உள்ளிட்ட 4 பேரை நேற்று (மே 3) கைது செய்தனர்.

News May 4, 2024

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சிறப்பு!

image

தேனி, வீரபாண்டியில் அமைந்துள்ளது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌமாரியம்மன் கோயில். முக்கியமாக கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்காக இங்கு பலரும் வழிபாடு செய்து வழக்கமாக இருந்து வருகிறது. சித்திரை, வைகாசியில் தேனியின் முக்கிய திருவிழாவாக இந்த கோயில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் போது 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

News May 4, 2024

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவம்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி வள்ளுவர் தெரு உறவினர்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவில் மறுபூஜையை முன்னிட்டு அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 3 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை விழா குழுவினர் வழங்கி கௌரவப்படுத்தினர்.

News May 4, 2024

மீண்டும் மோடிதான்: தேனியில் ஆதீனம் கருத்து

image

கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருத நுண்கலைப்பள்ளி சாா்பில் திருநாவுக்கரசர் குருபூஜை, சதிா் சலங்கை விழா நேற்று (மே.3) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை ஆதீனம், சலங்கை பூஜை மாணவியர்களை வாழ்த்திக் கலையும், கலாச்சாரமும் வளர்ப்பதற்கு மாணவா்கள், பெற்றோா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். மேலும் அவர் செய்தியாளர்களிடம், மீண்டும் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவார் என்றார்.

error: Content is protected !!