India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தேனியில் கனமழை முதல் மிககனமழைக்கு பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தேனியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-2025 கல்வி ஆண்டில் வெளிநாடுகளில் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை தொடர தேர்வு செய்யப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள் http://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் மே 31குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.06.2024 ஆட்சியர் தகவல்
தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் நடேசன். இவர் தனது சொந்த ஊர் சீலையம்பட்டியில் புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்திருந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த காரணத்தால் அப்பகுதி சீலையம்பட்டி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வம். கடந்த 15ஆம் தேதி இரவு 11 மணியளவில் காக்கில் சிக்கையன்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கம்பம் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் பொதுப்பணித்துறை எந்த வாய்க்காலையும் தூர்வாராத காரணத்தினால் விவசாயிகள் ஒன்று கூடி தனது சொந்தச் செலவில் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்து களமிறங்கி உள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்திற்கு மே.16 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் மே.17-19 ஆகிய நாட்களில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் மே.20 அன்று சிவப்பு எச்சரிக்கையும் அறிவித்துள்ளது. அது சமயம் பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 – 250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் தகவல்.
தேனி மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சோத்துப்பாறை பகுதியில் 9 செ.மீட்டரும், அரண்மனைப்புதூர் பகுதியில் 2 செ.மீட்டரும், தேக்கடி பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தேனி மாவட்டம் கம்பம் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தோப்பில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை சோதனையிட்டபோது அதில்3 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விசாரணையில், கேரளாவை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.