India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 -க்கும் குறைவாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலை விபத்தில் இறந்த 3 இளைஞர்களின் குடும்பத்திற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி அரசு உதவிகள் கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார். இதில் மாநில தி.மு.க. மாவட்ட செயலாளர் V.S.K. ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் துரை நெப்போலியன், தெற்கு நகர துணை செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

தேனி வடுகபட்டியை சேர்ந்தவர் அபிபிரபா இவர்க்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மகன் உள்ள நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார். இந்நிலையில் தற்போது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்க்கு ரயிலில் திருவனந்தபுரம் சென்றார் அப்போது குமரியை சேர்ந்த சிவா என்றவர் அறிமுகம் கிடைக்கிறது. அவர் வீட்டை ஏமாற்றுவதற்கு போலீஸ் உடை அணிந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் பிரகாஷ், ஜவஹர் உட்பட 5 பேர் ஒன்றிணைந்து தீபாவளி கொண்டாடினர். நேற்று காமக்காபட்டி அருகே ஒத்தவீடு வைகை அணை நீர்தேக்கப் பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினார். இந்நிலையில் அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று 1.11.2024 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியம் மூலம் சுயதொழில் துவங்க கடனுதவி, 40 வயதிற்கு மேல் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நல வாரியத்தில் 125 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் 25 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இந்த நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் 2,151 மாணவிகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் 4,091 மாணவர்கள் பயனடைந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் 100-ஆவது நடைப்பயிற்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடைப்பயிற்சி தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மீனவா் நலத் துறை, அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் சார்பில், இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வு எழுதுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் இது குறித்த விவரத்தை வைகை அணை, மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 04546-291891-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 31.10.2024 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.