India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் பாலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(19) பிளஸ் 2 மாணவரான இவர் அலைபேசியில் அதிக நேரத்தை செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்.8) அலைபேசியில் விளையாட தந்தையிடம் பணம் கேட்கவே தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரன் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.
காமக்காபட்டியைச் சேர்ந்தவர் வேண்டாமணி . இவரது அக்கா மகன் தெய்வம் என்பவர், நேற்று சொத்தில் உனக்கு பங்கு தர முடியாது எனக் கூறி அவரை தாக்கினார். அவருடன் வந்த ஈஸ்வரி, ராணி ஆகிய இருவரும் வேண்டாமணியை அடித்து உதைத்தனர். உடன் வந்த பாண்டி என்பவர் அரிவாளால் அவரின் தலையில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போடிநாயக்கனூர் அருகே, சோலையூர் கிராமத்தில் ஜூன் 12ஆம் தேதி ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. போடி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் ஆட்சித் தலைவரிடம் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா இன்று தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் 5-ஆவது சுற்று தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, இன்று (10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைப் போக்கும் விதமாக அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தேனி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்ற மாவட்ட காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தங்களது பணி மென்மேலும் சீரும் சிறப்புமாய் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று (ஜூன்.10) பி.எஸ்சி., கணிதம் இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஜூன் 12 இல் பி.ஏ., வணிகவியல் – கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தொழில் சார்ந்த பாடப்பிரிவு படித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று(ஜீன்.10) வேலப்பர் கோவிலுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் காயங்களுடன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனியில் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 383 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மூலமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை (ஜூன்.10) பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் தேனியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.