India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முல்லை நகரை சேர்ந்தவர் முருகதேவதி. இவரது மகன் மனைவியை விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்ததால் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 16ம் தேதி அவரது மருமகள் செல்வக்கனி தலைமையிலான 4 பேர் முருகதேவதியை அடித்து உதைத்து கத்தியால் அவரது இரண்டு கையிலும் கீறி காயம் ஏற்படுத்தினர். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒட்டனையைச் சேர்ந்தவர் மலைராஜன். இவர் சிறுகுளத்து கண்மாயை ஏலம் எடுத்து மீன் பிடித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் கருப்பசாமி என்பவர் 10 கிலோ மீன் கேட்டுள்ளார். மலைராஜன் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டு, கருப்பசாமி அரிவாளால் மலைராஜனை வெட்டினார். தடுத்தபோது அவரது கையில் வெட்டு விழுந்தது. மலைராஜனின் மனைவி தாய் என்பவருக்கும் அடி விழுந்தது.
பெரியகுளம் பகுதியில் பெய்யும் மழையால் வராகநதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகளவில் செல்வதால் வராகநதியில் யாரும் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இறங்கக்கூடாது எனவும், வராகநதி செல்லும் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 22 ஆம் தேதி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட வன அலுவலர் உத்திரவின் பெயரில் இன்று 19.05.2024 காலை முதல் கும்பக்கரை அருவிக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தற்காலிமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி ஆகும். நேற்று (மே.17) முன்தினம் அணையில் நீர்மட்டம் 115.12 அடியாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக இன்று அணையின் நீர்மட்டம் 7.5 அடி உயர்ந்து 122.67 அடியாக காணப்படுகின்றது.
தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் தெற்கு பகுதியில் மட்டும் நகராட்சி கழிவுநீர் செல்ல சாக்கடை அமைத்திருந்தனர். இப்பகுதியில் சிலர் கடைகள் வைத்து சாக்கடையை ஆக்கிரமித்து இருந்ததால் அவ்வழியே கழிவு நீர் செல்ல முடியாமல் இருந்தது. தற்காலிக ஏற்பாடாக சுகாதாரத்துறை கால்வாய் தோண்டி கழிவு நீரை திருப்பிய நிலையில் ஆக்கிரமித்துள்ள 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைக்குப் பின் காய்ந்த சோகைகளுக்கு தீ வைப்பதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிகின்றன. மண்வளம் கெடுவதோடு புகையினால் காற்று மாசடைகிறது. நன்மை செய்யும் பூச்சிகளின் முட்டைகளும் அழிகிறது. எனவே காய்ந்த சோகைகளுக்கு தீ வைக்க வேண்டாம். அந்த சோகைகளை இயந்திரம் மூலம் தூளாக்கி அதனை அங்க உரமாக பயிர்களுக்கு பயன்படுத்துமாறு தேனி மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.