India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை காலியாக உள்ள 1 மைய நிர்வாகி மற்றும் 1 வழக்கு பணியாளர் ஆகிய 2 பதவிகளுக்கான பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழு விவரங்களை theni.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து ஜூன் 20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் தொடர்பான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வருகின்ற ஜூன்.15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பெரியகுளம், நல்லகருப்பன்பட்டி, தேனி, கொடுவிலார்பட்டி, ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்தூர், ஸ்ரீரங்கபுரம், உத்தமபாளையம், லோயர் கேம்ப், போடி அம்மாபட்டி, சுந்தர்ராஜபுரம் ஆகிய பகுதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த இஞ்சி வியாபாரிகள் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து இஞ்சி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இஞ்சி இறக்குமதி செய்யக்கூடிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தேனி சந்தைகளில் கடந்த வாரம் கி.80 என விற்கப்பட்ட இஞ்சி தற்போது கி.200 என விற்கப்பட்டு வருகின்றது
பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் 11ம் வகுப்பு படித்துவருகிறார். அவர் கடந்த 7ம் தேதி டியூசன் முடிந்து இரவு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரதீஷ், ஆதித்யன் ஆகிய இருவர் அவருடன் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தனர். அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் போலீசார் நேற்று அடித்த இருவரையும் கைது செய்தனர்.
உசிலம்பட்டியை சேர்ந்த இரண்டாம் நிலை காவலரான திவ்யா என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் 10) தாய்மாமன் மகன் விஜயகுமாா் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ராஜதானி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு போலீசார் விசாரணைக்காக வரவழைத்த நிலையில் இருதரப்பினரும் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேவாரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று அவிநாசியப்பர் கோவில் அருகே முழு போதையில் தள்ளாடியபடி வந்த மணி, பொன்னுச்சாமி ஆகிய இருவரையும் கவனமாக போகும்படி கூறினார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் பாண்டியனை சரமாரியாக தாக்கி, மணி தான் வைத்திருந்த கத்தியால் பாண்டியனை குத்தினார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரணை.
தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 7 தாசில்தார்களை இடமாற்றம் செய்து தேனி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டிப்பட்டி துணை தாசில்தாராக பணியாற்றிய மருதுபாண்டியை தேனி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், ஆண்டிப்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய சதீஷ்குமாருக்கு உத்தமபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் கலெக்டர் மூலம் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி.- ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்.பி-யாக பதவியேற்ற நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல் திட்ட தலைவருமான எல்.மூக்கையாவை இன்று மரியாதை நிமித்தமாக தங்கதமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பெரியார் நீர் மின் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி முதல் நேற்று (ஜூன்.10) வரை 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நீர் மின் நிலையத்தில் அமைந்துள்ள 1 மற்றும் 4-வது ஜெனரேட்டர் மூலம் இன்று காலை முதல் 46 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
Sorry, no posts matched your criteria.