India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசாரால் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (மே.20) நீதிமன்ற காவலில் விசாரணைக்காக அவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக இன்று அழைத்துச் சென்றனர்.
தேனி மாவட்டத்தில் இன்று(மே.22) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வைகை அணை திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதாலும், அந்தப் பகுதியில், தொடா்ந்து மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் -ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை நீா்வளத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே வராகநதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில விளையாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் கால்பந்து வீரர்களுக்கு மாநில அளவிலான தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 – 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மைதானங்கள் தயார் படுத்தப்பட்ட நிலையில், தேனிக்கு மே 23 வரை அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதிகளில் தென்னை மரங்களில் அதிகளவில் நோய் தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று(மே 21) வேளாண் துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள தென்னை தோப்பில் ஆய்வில் ஈடுபட்டு, சிகப்பு கூன் வண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து,
அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
தேனிக்கு நாளை (மே.22) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோட்டூரைச் சேர்ந்தவர் நூர்ஜகான். கடந்த வாரம் அவரது கணவர் வீட்டில் வைத்து விட்டு சென்ற 300 ரூபாய் காணாமல் போனது. அதனால் அவர் மனைவி நூர்ஜகானை சந்தேகப்பட்டு கேட்டார். அதனால் ஒரு வாரமாக மன வேதனையில் இருந்த நூர்ஜஹான் நேற்று அவர்களது தோட்டத்து வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.