India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (36). இவரது கணவர் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி மதுபோதையில் பாண்டிச்செல்வி இடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மனைவி பாண்டிச்செல்வியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் கணேசன் மீது நேற்று வழக்குப்பதிவு.

தேவாரத்தை சோ்ந்தவர் முருகன். இவர் 2025ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவா (23). இவர் நேற்று முன் தினம் மாலை தேவதானப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீவா படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று (ஜன.30) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

வைகை அணை துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.31) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. அதன் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

தேனி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க

பெரியகுளம், அழகர்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (22). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று வேலைகளை முடித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலை செண்டர் மீடியனில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.