Theni

News June 3, 2024

மின் உற்பத்தி தொடக்கம்

image

லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (ஜூன்.2) முதல் 30 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

News June 3, 2024

தேனி: விஏஓ-க்களுக்கு ‘டீஷர்ட்’கள் வழங்க ஏற்பாடு

image

தேனி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களை  கொண்டு வரும் கிராம உதவியாளர்களுக்கு தனித்தனியாக பல்வேறு வண்ணங்களில் டி ஷர்ட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுளது. அதன்படி ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு நீலம், பெரியகுளம்- இளம் சிவப்பு, போடி-மஞ்சள், கம்பம்-பச்சை, சோழவந்தான்-வெண்மை, உசிலம்பட்டி தொகுதிக்கு ஆரஞ்ச் நிறத்திலான டி ஷர்ட்கள் வழங்கப்பட உள்ளன.

News June 2, 2024

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

image

வருஷநாடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பாண்டியம்மாளுக்கும், சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து மணிகண்டன் செலவு செய்துள்ளார்.இதனை சின்னக்காளை கண்டிக்கவே ஆத்திரத்தில் அவரை மணிகண்டன் கத்தியால் குத்தினார்.போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 2, 2024

பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு

image

தேனியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் நேரு சிலை அருகே உள்ள காய்கறி கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கடையில் காய்கறி பெட்டியை தூக்கும்போது அதிலிருந்து பாம்பு அவரை தீண்டியது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பின் தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News June 1, 2024

சிறுவன் மீது பாய்ந்த போக்சோ

image

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அச்சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 1, 2024

கூடலூர் தெருக்களில் மூலிகை செடி 

image

தேனி மாவட்டம் கூடலூரில் சோலைக்குள் கூடல் அமைப்பின் சார்பில் இன்று கோட்டை மேடு, கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருக்களில் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவதற்கு குழிதோண்டும் பணிகளும், அழகர் கோயில் வளாகத்தில் கவாத்து எடுக்கும் பணிகளும் நடைபெற்றது. இதில் சோலைக்குள் கூடல் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

தேனி: பெட்டிக்கடையை பார் ஆக்கியவர் கைது!

image

தேனி மதுவிலக்கு அமலாக்க விரிவு சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று(மே 31) ரோந்து சென்றனர். அப்போது உப்பார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே போதிராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையில் ஒருவருக்கு கிளாசில் மதுபானம் ஊற்றி கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் கடையை சோதனையிட்டு மது பாட்டில்களை கைப்பற்றி, பெட்டிக்கடையை பார் ஆக்கியதற்காக அவரை கைது செய்தனர்.

News May 31, 2024

வாலிபருக்கு கத்திக்குத்து: நால்வர் மீது வழக்கு

image

அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர்கள் தீபக், வினோத்குமார். இவர்களுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தினேஷ்குமாரை தீபக் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News May 31, 2024

தேனி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

நள்ளிரவில் திருடிச் சென்ற பைக் சுற்றி வளைப்பு

image

இராஜதானியை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவர் வழக்கம் போல் தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றார். நேற்று அதிகாலையில் அவரது டூவீலரை கணேசபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் தள்ளிக் கொண்டு போவதாக கிடைத்த தகவலின் பேரில் நடராஜன் ஆட்களுடன் சென்று அவரை சுத்தி வளைத்தார் . முத்துப்பாண்டி டூவீலரை போட்டு தப்பினார். புகாரின் பேரில் இராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!