India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி பள்ளிவாசல் தெரு பகுதியில் நேற்று (பிப்.3) அங்கன்வாடி ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 852 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.

கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று முன்தினம் (பிப்.2) கம்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தௌபிக்கான் (29) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தௌபிக்கான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 03.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தேனி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் <

தேனி மாவட்ட மக்களே, இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <

கோம்பையை சேர்ந்த தர்மர் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள மலர்விழி என்பவரை விமர்சித்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரில் தேனி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று தர்மரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, ஓடைப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.03) செவ்வாய்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

தேனி மாவட்டத்தில் இன்று (02.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.