India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பு மற்றும் விற்பனை அங்காடி மையம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவினருக்கு 40% மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளோர் வைகை அணை மீன்வளம் துறை அலுவலகத்தை நாடலாம் என தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற 65 ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு தேனி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், வெற்றிப்பெற்ற அனைவரும் இன்று (22.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா-வை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்

மாலத்தீவில் நடைபெற்ற உலகம் முழுவதும் மிகவும் பரவலாக அறியப்பட்ட 15-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி பெற்றுள்ளார். இதையத்துது, அவருக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தேனி முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணிபாரதி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள், தமிழக பொதும்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல், விருதுநகர் , ராமநாதபுரம் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரருக்கு வைக்கப்பட்ட வீரக்கல் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் மாணிக்கராஜ், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரகாசம் கண்டறிந்துள்ளனர். இது வீரக்கல் அல்லது நடுகல் என அழைக்கப்படுகிறது

தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை(நவ.23) உத்தமபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தேவையுள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தேனியில் அமைந்துள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தில் நாளை(நவ.23) இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு இலவசமாக சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. *பகிரவும்*

சபரிமலை வர முடியாத பக்தர்களின் வேண்டுகோள் படி தபால்துறையும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இதன்படி பிரசாதம் முன்பதிவு இந்தியாவில் உள்ள எந்த போஸ்ட் ஆபீசிலும் செய்ய முடியும். இந்த பிரசாதம் குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு வந்து சேரும். இதில் அரவணை, அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், குங்குமம், மஞ்சள் ஆகியவை இருக்கும்.
Sorry, no posts matched your criteria.