India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறைக்கு நேற்று (ஜூன்.6) கொண்டு வரப்பட்டன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 2450 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா 1225 வி.வி.பேட், கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பு வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டு அவை போலீஸ் பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்பட்டன.
தேனி மாவட்டத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டும் 900 ரவுடிகள் குற்ற பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவில் புதிய முயற்சியாக கூகுள் உதவியுடன், ரவுடிகள் வசிக்கும் வீடு, முகவரி உள்ளிட்ட விபரங்கள் கூகுள் வரைபடத்தில் தயாரிக்கப்பட்டு அவற்றை வைத்து தினசரி ரவுடிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்க தமிழ் செல்வனை நேற்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நேரில் சென்று பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுக ஊடக பிரிவு மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். சொந்த வேலை காரணமாக இவரும் இவரது மகன்கள் ஹரீஷ்குமார் , சியாம்சுந்தர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் போடி தேனி மெயின் ரோட்டில் சென்றனர். அதிமுக அலுவலகம் அருகே சென்றபோது வேலன் என்பவர் காரை வேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. அதி மழை காரணமாக போடி பார்க் நிறுத்தம் அருகே மழை நீரானது சாக்கடை கழிவு நீரில் கலந்து சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
பெங்களூரைச் சேர்ந்தவர் சஞ்சீவரெட்டி. இவர் தனது குடும்பத்தினருடனும் மைத்துனர் குடும்பத்தினருடனும் காரில் மூணார் சென்று நேற்று வீடு திரும்பினர். மலைப்பகுதியில் 4வது வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறிய கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சஞ்சீவரெட்டி உயிரிழந்தார். அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.