India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் கருணாநிதி பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் ஜூலை 23ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டிகளும் 24ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டிகள் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷஜுவனா தெரிவித்துள்ளார். இதில் காலை 10 மணிக்கு ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பிற்பகல் 2 மணிக்கு பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
தேனி-மதுரை சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ரயில் பாதை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக தேனியில் வருகிற ஜூலை 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை பேருந்துகள், இலகு ரக வாகனம், கனரக வாகனங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படுகிறது. குறிப்பிட்டுள்ள வழித்தடத்தை பின்பற்றி ஒத்துழைப்புத் தருமாறு மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கம்பம் சுங்கம் தெருவைச் சேர்ந்தவர் முகமது சாதிக் (35), இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர். இவர் மே 17ம் தேதி சமூக வலைதளத்தில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டதாக அவர் மீது தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில் எஸ்பி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்படி, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் படிக்கும் 11 மாணவர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் படிக்கும் இருவர் என 13 பேர் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டியில் இன்று PELE School of Football சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது. திமுகவின் தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா மகாராஜன் போட்டியினை தொடங்கி வைத்தார்.
உடன் திமுகவின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் சரவணன், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற தொகுதி 1 பணியிடங்களுக்கான முதல் நிலை போட்டித் தோ்வு 14 தோ்வு மையங்களில் நேற்று (ஜூலை.13) நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுதுவதற்கு தேனி மாவட்டத்தில் 3,895 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2,694 போ் தோ்வில் பங்கேற்ற நிலையில் 1,181 போ் எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஜூன்.28 ஆம் தேதி முதல் விநாடிக்கு 1,200 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து தேனி மாவட்டத்தில் முதல் போக நெற்பயிர் சாகுபடி பணிகள் தீவிரமடைந்தன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இன்மை காரணமாக தற்போது அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,200 கன அடியிலிருந்து 1,100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.