Theni

News June 8, 2024

முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

image

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் காமாட்சி. இவரது மகன் ரமேஷிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பால் வாங்க சென்ற சுவேதாவிடம் காமாட்சி தகராறில் ஈடுபட்டதால் அவரை ராம்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 8, 2024

தேனி: கண்காணிப்பு குழு அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை கண்காணித்திட வட்டத்திற்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2044 அறை கண்காணிப்பாளர்கள், 41 இயக்க குழுக்கள், 7 பறக்கும் படை, வீடியோ கிராபர் மொத்தம் 159 நபர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

News June 8, 2024

தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு

image

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கப்படும் பல்வேறு விண்ணப்பங்களுக்கு 16 நாட்களுக்குள் தீர்வு கிடைத்திடும் வகையில் அதனை கண்காணிக்க தாலுகா வாரியாக 5 அலுவலர்களை நியமித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும் விண்ணப்பங்களை வரிசை அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு செய்யப்படுவதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 8, 2024

வருமான வரி செலுத்துபவரா நீங்க

image

தேனி வருமானவரித்துறை மூலம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஏ.பி.எம் ஹோட்டலில் ஜூன் 11 அன்று வருமான வரி செலுத்துபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்துபவர்களின் கடமைகள், வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி வருமானவரித்துறை அறிவித்துள்ளது. 

News June 8, 2024

திராட்சை தோட்டத்தில் திருடிய இருவர் கைது

image

சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகுதுரை. கள்ளப்பட்டி ரோட்டில் இவருக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. கடந்த 30ம் தேதி அவர் தோட்டத்திற்கு சென்றபோது ரூ. 13,200 மதிப்புள்ள மோட்டார் வயர் திருடு போயிருந்தது. அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருநாதபாண்டி,  கோகுலபாண்டி ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. நேற்று ஓடைப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News June 8, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமயில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி, மாவட்ட சமுக நல அலுவலர் சியாமளா தேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமயில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி, மாவட்ட சமுக நல அலுவலர் சியாமளா தேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக திருநங்கைகள் சிறப்பு முகாம்

image

திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம், திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம் 21.06.2024 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News June 7, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வு பணிகள் குறித்து கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்
நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி
முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில்
இன்று (07.06.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 7, 2024

தேனி: ரூ.6.5 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது இடத்தின் அருகே புகழேந்தி என்பவருக்கு சொந்தமான 2198 ச.அடி காலி மனையை விலைக்கு வாங்கி தருவதாக கூறி அல்லிநகரத்தை சேர்ந்த விஜயசாரதி என்பவர் 6.05 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். இது குறித்து ராஜசேகர் மகன் கவுதம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!