India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சா. வாடிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். பணம் கொடுக்கல் வாங்கலில் இவரது மனைவியின் அண்ணனை சர்க்கரைப் பட்டியைச் சேர்ந்த பொன்மணி மற்றும் குடும்பத்தினர் அடித்துள்ளனர். அதை தட்டி கேட்கச் சென்ற கணேசனை பொன்மணி அடித்து உதைத்து இரும்பு சுத்தியலால் மண்டையை உடைத்துள்ளார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போடி நாயக்கனூர், குரங்கணி, காரிப்பட்டி, சென்ட்ரல் அகமலை பகுதிகளில் காப்பி விவசாயம் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் தற்போது காயவைத்து இருப்பு வைக்கப்பட்டுள்ள தோல் நீக்கப்படாத காப்பி தளிர் கிலோ ரூ.310 வரையிலும் தோல் நீக்கப்பட்ட காப்பி அரிசி கிலோ 1 க்கு ரூபாய் 420 முதல் 450 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் வரை விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளது.
தேனி மக்களவை தேர்தலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஓட்டுப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை விட 20% கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தவகையில், ஓட்டுப்பதிவில் செயல்படாத 10 ஓட்டுப்பதிவு இயந்திரம், 16 கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் 49 ஆகியவை தேனி தாலுகா அலுவலகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அரசாணைப்படி தமிழில் பெயர் பலகை அமைக்காத 10 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை எனில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அலுவலர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஜீன்.21 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் தேனி முதல் வீரபாண்டி சாலையில் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முதல் மேகம் கூட்டங்களுடன் மழை பெய்யும் சூழல் இருந்து வந்தது. தற்போது லேசான சாரல் மழை பெய்தது தேனி மக்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. வருகிற 22 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜீன்.21) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 27.06.2024 முதல் 05.07.2024 வரை (29.06.2024, 30.06.2024 மற்றும் 01.07.2024) ஆகிய நாட்கள் நீங்கலாக 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 8 உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு தலா 3 வீதம் 24 பண்ணை குட்டைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்கள் மற்றும் தோட்டங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏசி, பிரிட்ஜ் பழுது பார்த்தல் இலவச பயிற்சி ஜூலை.15 முதல் ஆக.20 வரை நடைபெறவுள்ளது. சேர விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் நகல் உடன் தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.