India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புற சுய உதவிக்குழுக்கள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியோர் மணிமேகலை விருது பெற விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மாணிக்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். அவருடைய குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததாக கூறி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் தேனி விஏஓ கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் கார்த்திக், பழனி, பஞ்சவர்ணம், நாகலட்சுமி, வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று (ஜூன்.27) வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், நில உடைமை ஆவணம், ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய் துறை சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து மொத்தம் 83 பேர் மனு அளித்தனர்.
தேனி உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட விவசாயிகள் இயற்கை உரங்களான மண்புழு உரங்களை பயன்படுத்த வேளாண் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 50% மானியத்தில் மண்புழு உரங்கள் தயாரிப்பதற்கு மண்புழு உர தயாரிப்பு படுக்கை வேளாண் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. உர தயாரிப்பு படுக்கை வாங்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி, அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளார்.
தேனியைச் சோ்ந்தவா் ராமராஜ். இவா் இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் நிலப்பட்டா விவகாரம் தொடா்பாக பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவனுடன் அவா் வாக்குவாதம் செய்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமராஜ் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.