India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை தேனி மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதியாண்டில் மத்திய அரசின் தீவிர மக்காச்சோள சாகுபடி திட்டத்தில் 615 எக்டேர் பரப்பு கூடுதலாக சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேனி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் கடந்தாண்டு குவிண்டால் ரூ.2350 என விற்பனையான மக்காச்சோளம் தற்போது ரூ.300 வரை அதிகரித்து குவிண்டால் ரூ.2670 என விலை உயர்ந்துள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்குதல் சம்பந்தமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் ஜூலை 13ஆம் தேதி பெரியகுளம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டி தேனி அருகே உள்ள வீரபாண்டி ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி போடி அருகே உள்ள நாகலாபுரம் ஆகிய பகுதியில் நியாயவிலை கடையில் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30.09.2024 தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் இலவசமாக பெற்று பூர்த்திசெய்து சமர்ப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அறிவித்துள்ளார்.
தேனி: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பந்தல் காய்கறிகள் சாகுபடிக்கு கல்தூண் பந்தல் அமைக்க எக்டேருக்கு ரூ.3 லட்சம் (247 சென்ட்) மானியம் வழங்கப்படும். மாவட்டத்தில் 20 எக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயி அதிகபட்சம் 2 எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் விவசாயிகள் உரிய சான்றுகளுடன் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 2024 ஜன. முதல் ஜூன் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7, கொலை, கொலை முயற்சி வழக்குகளில் 19, கஞ்சா விற்பனை, கடத்தல் வழக்குகளில் 9 என மொத்தம் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை, மணல் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள 130 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 31 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் தொடக்க விழா நாளை (ஜூலை 11) காலை 10 மணியளவில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று (ஜூலை 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய தலமாகவும் உள்ளதால், நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை சுருளி அருவி சாலையில் வென்னியாறு விலக்கு ஓடை பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குளிக்கச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் இன்று 442 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.