India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர்ராஜா (30), கருப்புசாமி (26), முத்துக்குமார் உள்ளிட்டோர் கோவை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி டேங்கர் டிரைவர்களாக பணியாற்றிவந்தனர். இந்த நிலையில், அழகர்ராஜா நேற்று எரியும் அடுப்பின் அருகே பெட்ரோலை கேனுக்கு மாற்றியபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவரும் உடல் கருகி பலியாகினர். 4 நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இதில் முன்னிலை வகித்த குடும்ப நலத்துறை இணை இயக்குநர் அன்புச்செழியன் பேசுகையில், தேனி மாவட்டத்தில் 23 ஆண்டுகளில் 3.27 லட்சம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. 2001இல் 10.93 லட்சமாகவும், 2011இல் 12.45 லட்சமாகவும் இருந்த மக்கள் தொகை 2024இல் 14.20 லட்சமாக அதிகரித்துவருகிறது என்றார்.
தேனி மாவட்டம் போடி வர்த்தக சங்க பொன்விழா மண்டபத்தில் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள விவசாய சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்
தேனி லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவிபேட் கருவியில் இருந்து பேப்பர் ரோலை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 15) தேர்தல் தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான ஊழியர்கள் பேப்பர் ரோலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிசாதமித்ரா 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 200 மீ. பட்டர்பிளையில் தங்கம், 800 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் வெள்ளி, 100மீ, 50மீ பட்டர்பிளை போட்டியில் வெண்கலம் வென்று தமிழக நீச்சல் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
தேனி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் முதல்கட்டமாக 51 அரசுப் பள்ளிகளிலும், 2ம் கட்டமாக 375 அரசுப் பள்ளிகளிலும் துவங்கப்பட்டது. நேற்று ஊரகப் பகுதிகளில் உள்ள 87 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவங்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 513 பள்ளிகளில் பயிலக்கூடிய 24,553 மாணவர்கள் பயனடைகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும், தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் கையெழுத்து போட்டிகள் நடைபெற உள்ளன. தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 23ம் தேதி காலை 10 மணியளவில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணியளவில் 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நடைபெறும் என தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பேரிடர்களால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு தேனி மாவட்ட விவசாயிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ் கேட்டுக் கொண்டார். நெல் பயிருக்கான காப்பீடு தொகையாக ஹெக்டேருக்கு ரூ.1,758.64 நவம்பர் 30ம் தேதிக்குள், எள் பயிருக்கான காப்பீட்டுத்தொகையாக ஹெக்டேருக்கு ரூ.469.30 ஜுலை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.