Theni

News August 10, 2024

தேனியில் இன்று பொது வினியோகதிட்ட குறைதீர் முகாம்

image

பொது வினியோகத்திட்ட குறைபாடுகளை நீக்கி உடனுக்குடன் தீர்வு காண தேனி மாவட்டத்தில் இன்று பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பெரியகுளத்தில் மதுராபுரி ரேஷன்கடை, தாடிச்சேரி ரேஷன்கடை, ஆண்டிபட்டி சண்முகசுந்தரபுரம் ரேஷன்கடை, உத்தமபாளையம், கம்பம், புதுப்பட்டி, போடி மற்றும் டொம்புச்சேரியில் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

கல்லூரி மாணவர்கள் உட்பட 120 பேருக்கு அபராதம்

image

தேனி – நாகலாபுரம் சாலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பந்தயம் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அதில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள், தலைக்கவசம் அணியாத மாணவர்கள் என 30 மாணவர்கள் உட்பட 120 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

News August 9, 2024

குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்

image

தேனி மாவட்டத்தில் கஞ்சா, கஞ்சா மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றை மாணவர்களிடம் விற்பனை செய்வோர், தொடர் திருட்டு, ரவுடிகள், கூலிப்படையாக செயல்பட்டு கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 300க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களின் குற்ற சரித்திர கையேடுகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என தேனி எஸ்.பி. சிவபிரசாத் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News August 9, 2024

போதைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

image

தேனி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரும் நாட்களில் போதை பொருட்களுக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், போதைக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்து அதனை https://enforcementbureautn.org/pledge என்ற இணைய முகவரியில், பெயருடன் பதிவு செய்தால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் முதியவர் கைது

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சுந்தரராஜபுரத்தை சேர்ந்த குருவையா(55) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம்(ஆக.07) குருவையாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 9, 2024

விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்பட்டும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

துவரை சாகுபடி – தேனி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 715 ஹெக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கூடுதலாக 1250 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என தேனி மாவட்ட வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

தேனி மாவட்டத்திற்கு மழை

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்றும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 8, 2024

250 கிராமங்களுக்கான குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடக்கம்

image

தேனி மாவட்டத்தில் 250 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ.162 கோடி மதிப்பில் 2020ம் ஆண்டு தொடங்கியது. சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு மயிலாடும்பாறை, தேனி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது திட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் தொடங்கியது என தகவல் அளித்துள்ளனர்.

News August 8, 2024

ரூ.3.65 கோடியில் கட்டப்படும் புதிய வணிக வளாக கட்டடப் பணி

image

சின்னமனூரில் 50 ஆண்டுகளுக்கு முன் 54 கடைகளுடன் கட்டப்பட்ட வணிக வளாகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. கடந்த மாதம் சேதமடைந்த 54 கடைகளும் பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டன. தற்போது, அந்த இடத்தில் ரூ.3.65 கோடியில் புதிய வணிக வளாகப் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரை, முதல் தளம் என மொத்தம் 74 கடைகள் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!