India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் மழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என தேனி கலெக்டர் ஷஜீவனா நேற்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் யாரும் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10, 12ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள், ஐடிஐ, பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். எனவே வேலை தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையிலிருந்து 1267 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப்-குன்னூர் வரை முல்லை பெரியாறு ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் ஆற்றிற்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும், போடி எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நவாஸ்கனி தனது வேட்பு மனுவில், சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக கூறி அவரது வெற்றியை எதிர்த்து சற்றுமுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசுகையில், எனது சொந்த ஊரிலேயே மாற்றுக் கட்சிக்கு ஆயிரம் வாக்குகள் விழுந்துள்ளது வருத்தமாக உள்ளது. இனிமேலாவது இந்த தவறு செய்யாதீர்கள் என்றார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேனியை சேர்ந்த மலர்விழி, ராஜாமணி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் ஒன்று சேர்ந்து பதிவு செய்யப்படாத மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கி அதன் மூலம் பல லட்சம் மோசடி செய்துள்ளனர். இவர்களிடம் பணம் செலுத்தி, திரும்ப கிடைக்காத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தேனி அழகுநாச்சியார்புரத்தில் உள்ள தேனி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் குழுக்கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் & பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
Sorry, no posts matched your criteria.