India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் 50% மானியத்தில் ஏக்கருக்கு 20 கிலோ விதை விநியோகம் செய்யப்படவுள்ளது. தேனி மாவட்டத்திற்கு 70 டன் விதை விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கான விதைகள் பெற்று பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.சஜீவனா அறிவித்துள்ளார்.
தானியங்கி நுண்ணீர் பாசன திட்டம் மூலம் சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.16,000/- பெரு விவசாயிகளுக்கு ரூ.18,000/- வழங்கப்படுவதாகவும், இதனை விவசாயிகள் தங்களது Android Mobile மூலமாக செயல்படுத்தலாம் என்றும் விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி கோட்ட தபால் துறையில் பெரியகுளம், போடியில் 2 தலைமை தபால் நிலையங்களும், 45 துணை தபால் நிலையங்கள், 174 கிராமப்புற கிளை தபால் நிலையங்களும், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை ஒருங்கிணைத்து தேனி கோட்டம் இயங்குகிறது. தேனி தபால் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 51,483 பேர் இணைந்துள்ளனர் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 24 கிராம ஊராட்சி விவசாயிகளின் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி சமன்செய்து, உழவு மேற்கொள்ள ஒரு ஹெக்டருக்கு 50% அல்லது ரூ.9,600 மானியமாக வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரை பயனடையலாம். சிறு, குறு, ஆதிதிராவிடர், பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரியாறு அணையில்
துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் அதிகாரிகள் கூறுகையில், பெரியாறு அணையின் மதகுகளில் R2, V1, V3 ஆகியவை இயக்கி பார்க்கப்பட்டதில் மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது. அதுபோல் அணையின் கசிவு நீர் ஆய்வு செய்யப்பட்டது. அது
78 லிட்டர் (L/P/H) இருந்தது. இது இன்றைய நீர்மட்ட அளவான 127.50 அடிக்கு மிகத் துல்லியமான கசிவு நீராக உள்ளது. இதனால் அணை மிகப் பலமாக உள்ளது என்றனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரியகுளம், மதுராபுரி, ஆண்டிப்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை(ஜூலை 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பெரியகுளம் நகர், தாமரைக்குளம், சோத்துப்பாறை, முருகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜூலை 24ஆம் தேதி காலை 9 மணிக்கு அமமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பித்தோர் தேர்வு தொடர்பான விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ (அ) 6379268661 எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.