Theni

News July 24, 2024

தேனியில் அமமுக நிர்வாகிகள் இன்று ஆலோசனை

image

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 24) காலை 9 மணிக்கு அமமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆலோசனைக் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

News July 24, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

image

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், துவரம்பருப்பு, நிலக்கடலை, எள், பருத்தி ஆகிய வேளாண் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் பயிர்களுக்கு உரிய பிரீமியம் தொகையை செலுத்தி காப்பீடு செய்யுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

மத்திய பட்ஜெட்: தேனியின் எதிர்பார்ப்பு

image

இன்றைய மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000ஐ உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாய தொழிலை பெரிதும் நம்பியிருக்கும் தேனி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேபோல் சென்னை-போடி ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும், மதுரை-தேனி இடையே அன்றாட ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. உங்கள் கருத்து என்ன?

News July 23, 2024

வீட்டுக்கான ஆணை வழங்கிய தேனி கலெக்டர்

image

கூடலூர் அருகே தம்மணம்பட்டி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 300 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் இணைந்து வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு ஆணையை வழங்கினர்.

News July 22, 2024

பொது நிவாரண நிதி காசோலை வழங்கல்

image

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு நபர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் காசோலையை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பயனாளிகளுக்கு வழங்கினார். நிதியைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News July 22, 2024

பேச்சுப் போட்டிக்கு உடனே விண்ணப்பிக்கவும்

image

கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

News July 22, 2024

தேனி கலெக்டர் ஆபிசில் பெண் தீ குளிக்க முயற்சி

image

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மூலக்கடை பகுதியை சேர்ந்த நிரஞ்சனா தேவி என்பவர் உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர் பிரபாகரன் என்பவர் 25 பவுன் நகையை பெற்றுக் கொண்டு மீண்டும் திருப்பி தராததால் அப்பெண் இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

News July 22, 2024

ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐக்கள், தனியார் ஐ.டி.ஐ.,க்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஐடிஐகளில் சேர்வதற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தேனி ஐடிஐ தொலைபேசி எண் 04545 291240ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News July 22, 2024

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வுசெய்து வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.25,000, சான்றிதழ் வழங்கப்படும். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை <>-1<<>> என்ற இணையளத்தில் பதிவிறக்கி, பூர்த்திசெய்து கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆக.12 கடைசி நாள் ஆகும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 22, 2024

தேனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா

image

தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி, தம்மணம்பட்டி பகுதியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.29.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 300 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.30 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

error: Content is protected !!