India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் அக.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சதுரகிரி மலைப்பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட்.1 முதல் ஆகஸ்ட்.5 வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்குள் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் சதுரகிரி மலைப்பகுதிக்கு வந்தடைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடும்பாறை வழியாக செல்லும் தேனி மாவட்ட பக்தர்கள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 78 மின் வழிப்பாதையில் முதல் கட்டமாக 23 மின்வழி பாதைகளை புனரமைக்க மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ் (Revamped Service Sector Scheme) என்ற திட்டத்தின் மூலம் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மின்வழிப்பாதையில் உள்ள வேளாண் மற்றும் குடியிருப்பு வினியோகம் தனித்தனியாக பிரிக்கப்படும். இதன் மூலம் குடியிருப்புகளுக்கு தடையின்றி மின் சப்ளை கிடைக்கும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
இ.எஸ்.ஐ.சி யின் கவிதா சமகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் ஜூலை.29 இல் தேனி இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தில் காலை.9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ.சி காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என துணை மண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். SHARE IT
2022-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை சிறந்த முறையில் பராமரிப்புக்கு கடமலைக்குண்டு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. ‘தமிழ்நாடு முதலமைச்சரின்’ சிறந்த காவல் நிலையத்திற்கான 2022-ம் ஆண்டிற்கான விருதை தற்போதைய கடமலைக்குண்டு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் M.கண்ணன், தேனி எஸ்.பியிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.
தேனி, அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டில் 1, புது பஸ் ஸ்டாண்டில் 4 வாகன காப்பகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் டூவீலருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் உத்தரவுபடி, வாகன காப்பகங்களில் இன்று (ஜூலை.26) முதல் டூவீலருக்கு ரூ.15 வசூலிக்கப்படும் என நகராட்சி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் டூவீலர்களை நிறுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு புதிய ஆதார் பதிவு செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், ஆதார் சேவை முகாம் வரும் ஜூலை 28ல் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் செயல்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணராஜா (34). இவர் ஜூலை.24 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் லட்சுமணராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக சதீஸ், முருகன், செல்வராஜ், பொன்னுச்சாமி உள்ளிட்ட 14 பேர் மீது போடி தாலுகா போலீசார் நேற்று (ஜூலை.25) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது. அந்த வகையில், தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டத்திலிருந்து கடமலைக்குண்டு காவல் நிலையம் சிறந்தாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் நேற்று(25.07.2024) கேடயம் வழங்கி பாராட்டினார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை சென்னையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி கைலாசநாதர் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று கைலாசநாதர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
Sorry, no posts matched your criteria.