India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிருக்கான காப்பீட்டுத்தொகை ரூ.87,932 வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.1,758 செலுத்தவேண்டும். காப்பீட்டு செய்ய ஜூலை 31 கடைசி நாள். எனவே தேனி மாவட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு செய்யலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.
தேனி கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த பானுமதி என்பவரிடம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள் தாங்கள் மும்பை காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொள்வதாககூறி, டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி அவரிடம் இருந்து ரூ.84,500,000 மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் டெல்லியைச் சேர்ந்த குர்முக்சிங் என்பவரை கைது செய்து இன்று (ஜூலை 29) தேனி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்களாறு, மகாராசா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குறைந்தவுடன் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்படும் என ரேஞ்சர் பிச்சை மணி தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்படி நேற்று (ஜூலை 28) தேனி மாவட்டம் முழுவதும் காவல்நிலையம் வாரியாக புகார்தாரர்கள் குறைதீர் ‘பெட்டிஷன் மேளா’ நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட இருதரப்பினர்களின் முன்னிலையில் அவர்கள் அளித்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன. தேனி மாவட்டத்தில் சுமார் 350 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மார்டன் பெண்டத்லான் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் விளையாட்டு அரங்க வளாகத்தில் 2 நாட்கள் முன்பு மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற தேனி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் ரனீஷ்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆகஸ்ட் 14 முதல் 18 வரை உத்ரகாண்ட் மாநிலம் காசிபூரில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு ரனீஷ்கர் தேர்வாகி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேர் நிலம் வைத்திருக்க வேண்டும். இதில் ஒரு ஹெக்டேர் பரப்பில் கால்நடை தீவனங்கள் வளர்க்க சோளம், மக்காச்சோள விதைகள், ஒரு கால்நடை உள்ளிட்டவை வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பத்தில் உள்ள 2 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் மற்றும் எஸ்.ஐ.க்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று (ஜூலை.28) யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதில் யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் ஆகியோர்களால் காவலர்களுக்கு புஜங்காசனம், வஜ்ராசனம், ஒட்டகாசனம் மற்றும் மூச்சு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேதி மாவட்டத்தி்ல் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காத்தல் திட்டத்தில் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 20,000 வேப்பங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.