Theni

News August 15, 2024

சிவன் கோவிலில் பாண்டியர் கல்வெட கண்டுபிடிப்பு

image

மத்திய தொல்லியல் துறையின், தென் மண்டல ஆலய ஆய்வு திட்டத்தின், சென்னை பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள மாயபாண்டீஸ்வரர் கோவிலில் பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை கல்வெட்டு பிரிவு இயக்குனர் இயேசு பாபுவின் தலைமையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் படியெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

News August 15, 2024

குமுளியில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எச்சரிக்கை

image

தமிழக-கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலை பாதை உள்ளது. லோயர் கேம்ப் – குமுளி வரை உள்ள 6 கிலோமீட்டர் தூரம் உள்ள மலை பாதை அடர்ந்த வனப் பகுதிக்குள் உள்ளது. மற்றும் இங்கு அதிக வனவிலங்குகள் உள்ளன. அதனால் மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை வீசாதீர்கள் என வன அதிகாரிகள் விழிப்புணர்வும் கொடுத்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News August 15, 2024

தேனியில் மாணவிகள் அலங்கரித்த தேசிய கொடி

image

நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 78ஆவது சுதந்திர தின விழா 14.08.2024 புதன்கிழமை, 15.08.2024 வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று முதல் நாள் நிகழ்வாக 2723 மாணவியர்கள் இணைந்து, கல்லூரி மைதானத்தில் 120×30 என்ற மிகப்பெரிய அளவில் தேசிய மூவர்ணக்கொடி மாதிரியை அந்தந்த வண்ணங்களுக்கு ஏற்ப சரியாக அமர்ந்து அலங்கரித்தனர்.

News August 14, 2024

மதுபான கடைகளை மூட வேண்டும் – ஆட்சியர்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபான கடை மற்றும் தனியார் மதுபான கடைகளை நாளை(ஆக.15) மூட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மது பாட்டில் சில்லறை விற்பனை நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

தேனியில் உள்ள 130 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

error: Content is protected !!