India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம், கம்பம் அதிமுக ஒன்றிய பொருளாளரான வழக்கறிஞர் பரணி இன்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் அவருக்கு MLA மகாராஜன், திமுக கட்சி வேஷ்டியை கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது பேரூர் செயலாளர் சரவணன், பேரூர் துணைச் செயலாளர் தங்கமாரி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பெரியகுளம் அருகே தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). இவருக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாத காரணத்தினால் மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் நேற்று முன்தினம் (மார்.9) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID -ஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க

வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 21- ந்தேதி கொடியேற்றப்படுகிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க 27-ந்தேதி நடைபெற்ற ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலரிடம் பாஜக மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகவும், 1 கோடிக்கும் குறைவாக ஏல தொகையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேரூர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தேனி வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் நாகரத்தினம் (72). இவர் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் தினந்தோறும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். 2 தினங்களுக்கு முன்பு விளக்கேற்றிய பொழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த நாகரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (மார்.9) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (50). இவருக்கு சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியின் வேதனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (50). இவருக்கு சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியின் வேதனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.