India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியகுளத்தை சேர்ந்த சிவக்குமார் மனைவி ராஜேஸ் வரியை, சிகிச்சைக்காக பாலகிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு உடல் நிலை மோசம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின் இதுகுறித்து இணை இயக்குனர் ரமேஷ் பாபு கொடுத்த புகாரில் பிசி பட்டி போலீசார் விசாரித்து, ராமசாமியை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
கம்பம்மெட்டு குடியிருப்பிலுள்ள ரேசன் கடையில் தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் நேற்று (ஆக.28) ஆய்வு மேற்கொண்டார். இதில் பயனாளிகளின் எண்ணிக்கை, பொருள்களின் இருப்பு குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ரேசன் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்டது. இவற்றை அகற்றும்படி அவர் உத்தரவிட்டதையடுத்து கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர்.
போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் நலன் காக்கும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் போடிநாயக்கனூர் நகராட்சி நகர்மன்ற தலைவர் இராஜராஜேஸ்வரி சங்கர், நகர்மன்ற துணைத் தலைவர், மகளிர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் 90 சதவீதம் காலியாக உள்ளது. இதனால் நோயாளிகள் மருந்து மாத்திரை பெற சிரமம் ஏற்படுகிறது. எனவே மருந்தாளுனர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 130 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடுவிலார்பட்டி, ஊஞ்சாம்பட்டி, கடமலைகுண்டு ஊராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. விரைவில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (ஆக.30) தேனி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கு தேர்வுகள் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 044-2888 8060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியை சோ்ந்தவர் ஈஸ்வரி. இவர் தனது கணவருடன் நேற்று (ஆக.28) கொசவபட்டியிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே முருகன் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாளை (ஆக.30) கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது 10 ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, பெற்றோரின் பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரம், கல்லூரி கல்வி உறுதி சான்று ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.28) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தனியார் பெரு நிறுவனங்களின் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியில் இருந்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவியினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்விக் கடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 11 மணியளவில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.