Theni

News October 16, 2024

19ம்‌ தேதி உணவுப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்

image

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்கூட்டம் (Civil Supplies Grievance meeting) மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வரும் 19ம் தேதி அந்தந்த பகுதியில் நடைபெறும் என்றும், இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா இன்று (அக்.16) தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

தேனி: 7 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு

image

வீரபாண்டியை சேர்ந்த உலகநாதன் (34) என்பவர் கடந்த 2020- ம் ஆண்டு அண்ணன், தம்பிகளான 7, 10 வயதுடைய இரு சிறுவர்களை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளர். இதுகுறித்த புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(அக்.15) உலகநாதனுக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வி.கணேசன் தீர்ப்பளித்தார்.

News October 15, 2024

தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் போடி சி.பி.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இத்தகவலை மாவட்டஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்தார்.

News October 15, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

தேனியில் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று தேனியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 14, 2024

விவசாய நிலம் வாங்குவதற்கு ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டம் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் பொருட்டு நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வழங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூலம் குறைந்த வட்டி கடனாக பெற்று வழங்கப்படுகிறது. இதனால் விவசாய நிலம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

மழை வெள்ளம் குறித்து புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்ணான 04546-250101 என்ற எண்ணிற்கு மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசால் TN-Alerts என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை Google Play Store பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஷஜீவனா இன்று (அக்.14) தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் யாரும் ஆறு மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், தங்களது வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விநியோகிக்கப்படும் குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை கவனமாக கையாள வேண்டும். மேலும், விநியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 14, 2024

பெரியார் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

image

முல்லை பெரியார் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் செப்.13ல் 132 அடியை எட்டிய அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி(அக்.13) 121 அடியாக குறைந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 1033 கன அடியில் இருந்து 1000 கன அடியாக தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு என்ன வகையான பாதிப்பு, என்ன வகையான காய்ச்சல் என கவனித்து அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!