Theni

News October 23, 2024

தேனி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

image

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் தேனி வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று(அக்.22) நடைபெற்றன. போட்டியில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1200 மீ.,ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

News October 23, 2024

நிலத் தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது

image

தேனி வருசநாடு அருகே சீலமுத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு மலைச்சாமி, அய்யனார் என்ற இரு தம்பிகள் உள்ளனர். நிலப்பிரச்சனையில் அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் அண்ணனை தாக்கியதில் உயிரிழந்தார். கொலை செய்த தம்பி அய்யனாரை வருசநாடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

News October 23, 2024

தேசிய அளவிலான ஜுடோ போட்டியில் தேனி மாணவர் சாதனை

image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 450 பள்ளிகள் பங்கு பெற்றன. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி மாணவர் ரினோஸ்வாசன் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு நேற்று(அக்.22) பள்ளி நிர்வாக குழு சார்பில் தங்க நாணயத்தை பள்ளியின் தாளாளர் ராஜாங்கம் வழங்கி பாராட்டினார்.

News October 23, 2024

தீபாவளி பண்டிகை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ள கூட்டரங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து பட்டாசு கடைகளிலும் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா கடை முன்பு தீ விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

News October 22, 2024

சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கம்

image

சுருளி அருவியில் இன்று(அக்.22) குளிக்க தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழையால் குளிக்க சுருளி அருவியில் தடை செய்யப்பட்டிருந்தது.  2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று(அக்.22) தடை நீக்கம் செய்யப்பட்டவுடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 22, 2024

தேனி மாவட்டத்தில் மழை எச்சரிகை – வானிலை மையம்

image

தேனி மாவட்டத்தில் இன்று(அக்.22) இரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

தேனி: ரூ.8.49 கோடி வங்கி கடன் ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

தேனி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட தொழில் மையம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான 30 நபர்களுக்கு ரூ.8.49 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார்

News October 22, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று(அக்.22) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குறைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News October 22, 2024

சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி பதிவிநீக்கம்

image

சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த நாகமணி மீது ஊராட்சிமன்றத்தை சேர்ந்த 10 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் நாகமணியின் கணவர் ஆதிக்கம் செலுத்துவதாக புகார்எழுந்துள்ளது.இந்நிலையில் நாகமணியை பதவிநீக்கம் செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

News October 22, 2024

சிறுத்தை பீதியில் கிராம மக்கள்; நடவடிக்கை தேவை

image

மயிலாடும்பாறை அருகே கருமலைசாஸ்தாபுரம் கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர் இவர்கள் ஆடு.மாடுகளை மேய்ச்சலுக்கு மலையடிவாரத்திற்கு கொண்டு செல்வார்கள். இப்படி சென்றதில் ஆடு ஒவ்வொன்றாக காணாமல் போனதை கண்ட நபர் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை ஓரிரு தினம் நிறுத்தவே ஆட்டைத் தேடி வந்த சிறுத்தையை கண்டு வனத்துறையினரிடம் கூறினர்

error: Content is protected !!