India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்தில் இன்று(அக்.24) மாலை தரையிறங்க இருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழையின் காரணமாக நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மதுரை அருகே உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. மழை நின்ற பிறகு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேனி மக்களவை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி எம்.பி தங்கதமிழ் செல்வனை மாபெரும் வெற்றி பெற வைத்த மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி 5 பவுன் தங்கச் செயினையும், சோழவந்தான் MLA வெங்கடேசன் தங்க மோதிரத்தையும் பரிசாக தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் வழங்கினார்.
தேனிமாவட்டம் வைகை அணையின் இன்றைய நிலவரம். அணையின் மொத்த உயரம் 71 அடி, தற்போதைய நீர்மட்டம் 58.6 அடி, அணையின் மொத்த கொள்ளளவு 6,091 மில்லியன் கன அடி, அணையின் தற்போதைய கொள்ளளவு 3,343 மில்லியன் கன அடி, அணைக்கு நீர்வரத்து 1,952 கன அடி, அணையில் இருந்து 969 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுக்கும் பணிகள் கால்நடை பராமரிப்புத்துறையினரால் நடத்தப்படும். தேனி மாவட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்ள 126 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 31 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக, களப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய் கிராம வாரியாகவும், நகரப் பகுதியில் வார்டு வாரியாகவும் நடக்க உள்ள இப்பணிகள் நாளை(அக்.25) தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. இதனால் எழும் அதிகப்படியான ஒலி & காற்றால் சிறுவர்கள், பெரியவர்கள் பாதிக்கப்படுவர் என தேனி ஆட்சியர் தெரிவித்தார்..
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அக்.16 முதல் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.23) முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் 21வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 25ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரசக்கநாயக்கனூரில் மாரியம்மன் தெரு அமலபுஷ்பம் என்பவரின் 6 வயது பேத்தி 3 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய இதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக உறுதி செய்யபட்டார். அவருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூ. அபராதம், ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
தேனி அல்லிநகரம் மூர்த்தி தெருவில் உள்ள நாயுடு சாவடி சங்கம் கட்டிடத்தில் அக்.25ஆம் தேதி முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தேனி நலம் ஹெல்த் கேர் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
Sorry, no posts matched your criteria.