India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வழித்தடம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை எம்பி முரசொலி மாறன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உட்பட பலர் உள்ளனர்.
கல்லணை தலைப்பில் தொடங்கி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கல்லணை கால்வாய் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது ஆகும். மேட்டூர் ஆணை கட்டப்பட்ட போது, அத்துடன் கட்டப்பட்ட கல்லணை கால்வாய் 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டோடு (நேற்று) 90-வது வயதை நிறைவு செய்கிறது கல்லணைக் கால்வாய். இன்று(வியாழக்கிழமை) இந்த கல்லணைக்கால்வாய்க்கு 91-ஆவது வயது பிறந்தது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று மற்றும் நாளை (ஆக.29 & 30) நடைபெற உள்ளது. இதில் டாடா நிறுவனம் பங்கேற்று 1,500 பெண் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. 18-21 வயதுக்கு உட்பட்ட 12-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்த பெண்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் சாதி ரீதியாக பேராசிரியை பேசியதாக கூறி மாணவர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து அசாதாரண சூழல் கருதி கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுகிறது என கல்லூரி முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் பேராசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆக.29 முதல் கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைவு பிரிவில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போட்டிகளில் பங்கு பெற மகளிர் சுய உதவிக் குழுக்கள் குழு விவரங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர் வசம் 30/8/24 க்குள் சமர்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வடவாறு, கல்லணை கால்வாய், காவிரி ஆறு, வீரசோழன் ஆறு மற்றும் மல்லிப்பட்டினம் கடற்கரையில் கரைக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA Committee Meeting) தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நாளை காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் பாலகணேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மேலவஸ்தாச்சாவடியில் அமைந்துள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை கூட்டரங்கில் தொழில் முனைவோர் (ம) ஸ்டார்ட்அப்ஸ் மாநாட்டினை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் எம்பி முரசொலி, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பழனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை தமிழ் பயிலும் மாணவரை பேராசிரியர் சாதி ரீதியாக பேசியதாக கூறி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் நிலவும் அசாதாரண சூழல் கருதி காலவரையறையின்றி கல்லூரி மூடப்படுவதாக அக்கல்லூரியின் முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.