India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூா் மாவட்டம், ராஜாமடம் பகுதியில் சனிக்கிழமை இரவு அழுது கொண்டிருந்த 17 வயது சிறுமியை அப்பகுதியினா் மீட்டு, அதிராம்பட்டினம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், முத்துப்பேட்டையை சேர்ந்த சிறுமி மன்னார்குடிக்கு சென்ற போது முத்துப்பாண்டியன், தவசீலன் ஆகியோர் கடத்தி வந்து, ராஜாமடம் அக்னிஆறு பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் தலைமை கொறடாவாக பதவி வகித்த கோவி.செழியன் சென்னை ராஜ் பவனில் இன்று (செப்.29) பிற்பகல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர்கல்வி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை மன்னார்குடியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மன்னார்குடியை சேர்ந்த முத்துப்பாண்டியன் (28), தவசீலன் (27) ஆகிய இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அமைச்சரவை நேற்று இரவு மாற்றும் செய்யப்பட்டது. மேலும் அமைச்சரவையில் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியன் இடம் பெறுகிறார். இவர் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாகவும் பதவி வகித்து வந்தார். மேலும் இன்று மாலை 3.30 மணியளவில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்துக்கள் COMMENTஇல் பதிவிடவும்.
கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 5ந் தேதி அன்று, மனவளர்ச்சி குன்றிய பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட கணபதி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலமையில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்த நிறுவனம் சார்பில் ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இதற்கான வகுப்புகள் அக்.14 முதல் தொடங்கவுள்ளது. இந்த பாடத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயத்துள்ளது. 21-40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுயதொழில் தொடங்கிட ஆர்வமுள்ள முன்னாள் படைவீரர்கள் (ம) படைப்பணியின் போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்களுக்கு வங்கிகள் மூலம் மானியத்துடன் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வசதி செய்து தரப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் நாளை செப். 28 மற்றும் செப்.29 விடுமுறை நாட்கள் ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து திருச்சி கும்பகோணம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகியவூர்களுக்கு 295 பேருந்துகளும் திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் திருப்பூர், மதுரை, காரைக்குடி ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்து என மொத்தம் 470 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா மற்றும் கோடை சாகுபடிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 348 ரூபாய் காப்பீடு செலுத்த கடைசி நாள் 15.11.2024, உளுந்து பயிருக்கு ஏக்கர் ஒன்று 90 ரூபாய் கடைசி நாள் 17.02.2025, நிலக்கடலை ஏக்கருக்கு 443 ரூபாய் கடைசி தேதி 31.01.2025, எள் ஏக்கருக்கு 215 ரூபாய் கடைசி நாள் 17.03.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.