Thanjavur

News October 7, 2024

தஞ்சை: பாலியல் குற்றவாளி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

புதுக்கோட்டையை சேர்ந்த கஞ்சா வியாபாரியான ராஜபாண்டியன், தவமணி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனர். சீர்காழி பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 போரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட எஸ்.பி., கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

News October 6, 2024

தஞ்சை மாவட்ட தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழுக்கு தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் தமிழறிஞர்கள், தாசில்தார் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

தஞ்சை-சென்னை இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

image

திருச்சியில் இருந்து சென்னைக்கு தஞ்சை வழியாக பகல் நேரத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தஞ்சை எம்.பி முரசொலி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருச்சியிலிருந்து அதிகாலை 5.35 புறப்பட்டு, தஞ்சைக்கு 6.25 மணிக்கு வந்தடையும் ரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12.35 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருச்சி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (அக்.5) இரவு 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 5, 2024

தஞ்சை வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்: எம்.பி

image

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையின் படி திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதலாக ஒரு ரயில் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனால் தஞ்சை மற்றும் சுற்று வட்டார ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 5, 2024

தஞ்சையில் மாபெரும் கல்விக்கடன் முகாம்

image

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமை இன்று நடத்தியது. நிகழ்வில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்
முரசொலி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், DRO, RDO, மேயர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், அனைத்து வங்கி அதிகாரிகள் பயன்பெறும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News October 5, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் பயன் பெறும் வகையில் தஞ்சை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 4, 2024

தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்கு எஸ்பி அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்ட ஊர் காவல் படையில் உள்ள 52 (49 ஆண்கள் – 03 பெண்கள்) காலி பணியிடங்களுக்கான தேர்வு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள் வருகிற 10.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

News October 4, 2024

திருமங்கலக்குடியில் நேர்காணல் முகாம்

image

திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 9ஆம் தேதி நடக்கிறது. இந்த முகாமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு காணலாம். மேலும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே முன் மனுக்கள் பெறும் பொருட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.

News October 4, 2024

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருக்காட்டுப்பள்ளி, திருப்புறம்பி, பேராவூரணி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (அக்.5) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, கோவிலாச்சேரி உள்ளிட்ட பிற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!