Thanjavur

News October 10, 2024

மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டி வருகிற 29ஆம் தேதி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் கடையில் பணிபுரிய வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 93 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbtnj.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 10, 2024

தேசிய கபாடி போட்டிக்கு தஞ்சை மாணவன் தேர்வு

image

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட கபாடி போட்டிக்கான தமிழ்நாடு மாநில அளவிலான தெரிவு போட்டியானது சத்தியமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் நிகிலன் என்ற மாணவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

News October 9, 2024

கும்பகோணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

image

கும்பகோணம் அருகே பேட்டை வடக்கு தெருவில் அப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.24,100 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

News October 8, 2024

மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா

image

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நாகப்பட்டினம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்த கையேட்டினை வெளியிட்டது.

News October 8, 2024

தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் செயல்படும் மாவட்ட தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்ஹேமசந்த் காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News October 8, 2024

மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் மக்கள் நேர்காணல் முகாம்

image

திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை சரகம், திருமங்கலக்குடி கிராமம் ஈஸ்வரி மஹாலில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் எதிர்வரும் 09.10.2024 (புதன் கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News October 8, 2024

தஞ்சை: பண்டிகை நாட்களை முன்னிட்டு 680 சிறப்பு பேருந்துகள்

image

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக திருச்சி,தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதியில் இருந்து சென்னை மற்றும் மறு மார்க்கத்தில் சேர்த்து 680 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

தஞ்சை: தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது – எச்.ராஜா

image

தஞ்சையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா கூறியதாவது, சென்னை விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்தனர்.. மருத்துவமனையில் 250க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் தமிழக அரசு தோல்வியுற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். கருத்துக்களை COMMENTஇல் பதிவிடவும்.

News October 7, 2024

தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7826012051, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!