Thanjavur

News February 19, 2025

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர செல்ல வேண்டிய கோயில்

image

திருவையாறு வட்டம் புனவாசல் அருகே உள்ள பெரும்புலியூர் எனும் கிராமத்தில் சௌந்தரநாயகி உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு சென்று பிரிந்த கணவனோ, மனைவியோ அம்மனிடம் மனம் உருகி வேண்டினால் மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம். நீதிமன்றம் வரை சென்ற வழக்குகள் கூட இங்கு வந்து வணங்கிய பின் தீரும் என பக்தர்கள் கூறுகின்றனர். SHARE NOW.

News February 19, 2025

காதல் நினைவுச்சின்னம் பழமை மாறாமல் புனரமைப்பு

image

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, தனது காதல் மனைவியின் நினைவு சின்னமாக தஞ்சையை அடுத்த ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம் என்ற நினைவு சின்னத்தை கட்டினார். இந்த முத்தம்மாள் சத்திரம் தமிழக தொல்லியல் துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 6ஆவது நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சத்திரம் தற்போது ரூ.13 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது.

News February 19, 2025

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு

image

தஞ்சாவூரில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனம் மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) பணிக்கு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 22 அன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ரயிலடி எதிர்புறம் உள்ள ஹோட்டல் ஆரிய பவன் இரண்டாம் தளத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இந்த பணி 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 18, 2025

தஞ்சாவூர்: NAKSHA திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

image

தஞ்சாவூர் மாவட்டம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் NAKSHA திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் இன்று (18.02.2025) துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள் (திருவையாறு), திரு.டி.கே.ஜி. நீலமேகம், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News February 18, 2025

மேலத்திருப்பந்துருத்தி‌ பகுதியில் மக்கள் நேர்காணல் முகாம்

image

கண்டியூர் அருகே மேலத்திருப்பந்துருத்தி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்திட தஞ்சாவூர், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு வின் படி நாளை காலை 10‌ மணி மக்கள் நேர்காணல் முகாம் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு இதன்மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

குழந்தை வரம் சுகப்பிரசவம் அருளும் திருச்சி தாயுமானவர் சுவாமி

image

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு கீழே அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில். தாயுமானவரை மனம் உருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்கள் வாழைத்தார் வாங்கி தொட்டில் கட்டி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என கூறப்படுகிறது. இங்கு சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கான மருந்து வழங்கப்படுவது விசேஷமாகும்

News February 18, 2025

தஞ்சை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் 

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே வருகிற 21ஆம்  தேதி தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

தஞ்சை முதல்வர் மருந்தகத்தினை கலெக்டர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்டம் காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை வளாகத்தில் திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வி.தமிழ்நங்கை அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

News February 18, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

image

தஞ்சையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், சென்னையில் வேலை செய்த போது 14 வயது சிறுமிடம் பழக்கம் ஏற்பட்டது. ஜெகதீஸ்வரன் சிறுமியை, தஞ்சை வரசொல்லிய நிலையில், ஜெகதீஸ் மாயமானார். பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து புவனேஷ்வரன் என்பவர் வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் வெளிவர காதலன் ஜெகதீஸ்வரன், புவனேஷ்வரனை போலீஸ் கைது செய்தனர்.

News February 18, 2025

அழகிய உருவம் பெற வணங்க வேண்டிய திருத்தலம்

image

கும்பகோணம் அருகில் உள்ள கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் சுவாமி திருத்தலத்தின் தல வரலாற்றின் படி, இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட அமுதக்கிணறு எனும் தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ கோடீஸ்வரர் சுவாமியை வணங்கினால் அழகிய உருவம் பெறலாம் என்பது ஐதீகம். இப்போதும் பலர் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெற வேண்டி கொள்கிறார்கள்.

error: Content is protected !!