Thanjavur

News December 26, 2024

பூதலூர் பகுதிகளில் அமைச்சர் திறப்பு

image

பூதலூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள முத்து வீரகம்பட்டி, முத்தாண்டிபட்டி, அச்சம்பட்டி, புதுக்குடி ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி மைய கட்டிடம், பொது விநியோக கட்டிடம், இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், எம்பி முரசொலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 26, 2024

Way2News-இல் நிருபராக சேர விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <><இங்கே க்ளிக் செய்யவும்><<>> பதிவு செய்யவும். இதன் மூலம் உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுவது மட்டுமில்லாமல் கூடுதல் வருவாய் ஈட்டவும், இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும். மேலும் விவரங்களுக்கு +91 8466022122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 26, 2024

தஞ்சையில் செல்ல பிராணிகளை தத்தெடுக்க சிறப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்புச் சங்கம் (SPCA) சார்பில், முதல் முறையாக சமூக பிராணிகளான நாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்க இயலாத காரணங்களால் பராமரிக்க முடியாத வளர்ப்பு பிராணிகளுக்கான தத்து கொடுக்கும் நிகழ்வு வருகிற‌29ஆம் தேதி மாதாகோட்டை சாலையில் உள்ள நாய்கள் பூங்கா (Dogs Park) வளாகத்தில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு செல்ல பிராணிகளை தத்து எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 25, 2024

123 கிலோ கஞ்சா பறிமுதல் – நான்கு பேர் கைது

image

ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பாப்பநாடு அருகே போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றது. இதனையடுத்து விரட்டிப் பிடித்து போலீசார் காரில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள 123 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அபிலாஷ், சதீஷ்குமார், லெட்சுமணன், நித்திஷ் ஆகிய நான்கு பேரை பாப்பநாடு போலீசார் கைது செய்தனர்.

News December 25, 2024

புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைக்கிறார் – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அங்கன்வாடி, பஞ்சாயத்து அலுவலகம்,பள்ளி வகுப்பறை என மொத்தம் 598.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நாளை 26 ஆம் தேதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

கும்பகோணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை 26 ஆம் தேதி 4மணி அளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், சட்டமன்றத் உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்த கொள்ள‌ உள்ளனர்.

News December 25, 2024

திருவையாறு: எம்.ஜி.ஆர்-க்கு திதி கொடுத்த ரசிகர்

image

திருவையாறு படித்துறை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (80). திருவையாறு அதிமுக தொண்டரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகருமான இவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் திதி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.24) எம்.ஜி.ஆரின் 37-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் திதி கொடுத்து வழிபட்டார்.

News December 25, 2024

ஒரத்தநாடு: 14 வயது மாணவி கர்ப்பம்; ஒருவர் கைது

image

ஒரத்தநாட்டை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பாப்பநாடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிறுமி ராஜமாணிக்கம் எனும் இளைஞருடன் வெளியூரில் வசித்து வருவதை அறிந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜமாணிக்கம் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

News December 25, 2024

தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கட்டுமானம், ஓட்டுநர் உள்ளிட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் வருகிற 27ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை 13 நாட்கள் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

தஞ்சையில் 45 கடைகளுக்கு அபராதம்

image

தஞ்சை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 45 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அழிக்கப்பட்டன. பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!