Thanjavur

News January 1, 2025

தஞ்சை: புகையிலை விற்றவர்களுக்கு 2 கோடி அபராதம்

image

தஞ்சை மாவட்டத்தில் ஓராண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 929 பேர் கைது செய்யப்பட்டனர்.  புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட 1131 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ரூ.2,75,70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

பாபநாசம் அருகே விபத்து – இருவர் உயிரிழப்பு

image

பாபநாசத்தை சேர்ந்த சக்திவேல் – பிரபாகரன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வடசருக்கை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தோடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

News December 31, 2024

தஞ்சாவூர்: 1030 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள் மீது 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 368 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.  1,030 கிலோ கஞ்சா, 785 கிராம் டைசிபம் பவுடர், 130 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். 

News December 30, 2024

எம்எல்ஏ-வுடன் நாட்டுப்புற பாடகி சந்திப்பு

image

தஞ்சை மத்திய மாவட்ட அலுவலகத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரனை  மரியாதை நிமித்தமாக தஞ்சை பாடகி சின்னப்பொண்ணு இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.

News December 30, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதன் இறுதிக் கட்டத்தை எட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்று (டிச.30) மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்.

News December 30, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி நியமனம்

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராஜாராம் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை எஸ்.பி-யாக இருந்த ஆஷிஷ் ராவத் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேர் செய்யவும்!

News December 29, 2024

தஞ்சையில் நெடுந்தூர ஓட்டப் போட்டி அறிவிப்பு

image

தஞ்சையில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டப்போட்டி தஞ்சாவூரில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும் இப்போட்டியில் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க  விரும்புவோர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிற்கு நேரிலோ அல்லது 04362-235633 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

News December 29, 2024

தஞ்சை வந்த 2,600 டன் கோதுமை

image

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கோதுமை வழங்குவதற்காக பஞ்சாப் மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 2,600 டன் கோதுமை தஞ்சை வந்தடைந்தது. 42 வேகன்களில் வந்த கோதுமை அங்கிருந்து லாரிகள் மூலம் மத்திய சேமிப்பு கிடங்கு எடுத்து செல்லப்பட்டு, பின்னர் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

News December 29, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 14 ஊராட்சி ஒன்றியம் – நகர்ப்புறங்களில் உள்ள 2.77 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போடும் பணி வருகிற ஜன-03 தேதி தொடங்கி ஜன-31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆறாவது கட்ட இந்த மருத்துவ முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

தஞ்சையில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

image

ஒரத்தநாட்டில் நாம் தமிழா் கட்சி சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெரும் புகழ் போற்றுவோம் என்ற தலைப்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. தமிழர்கள் அனைவரும் நம் இயற்கை வேளாண் முறைக்கு திரும்பி நம்மாழ்வார் கனவை நினைவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!