Thanjavur

News June 14, 2024

கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், சுற்றுலாத் துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து சுற்றுலா குழும உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் – திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

News June 14, 2024

தஞ்சை அருகே நாளை மின்தடை 

image

கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(ஜூன்15) சனிக்கிழமை நடைபெறுவதால் இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கும்பகோணம் நகர், கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம், மேலக் காவேரி பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு கும்பகோணம் உதவி பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

தஞ்சை அருகே இன்று மின்தடை

image

வடசேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9: 00 மணி முதல் மாலை 5 மணி வரை வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தனிக்கோட்டை , கருப்பூர் ,புலவஞ்சி , கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, வளையக்காடு ,மகா தேவபுரம் , கண்ணுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

News June 12, 2024

பெண் போலீஸ் இடையே மோதல்: பணியிடை மாற்றம்

image

ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்களுக்கு பணி நிமித்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஒருவரை தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததை அடுத்து விசாரணை செய்து ஒரு பெண் காவலரை ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கும், மற்றொரு பெண் காவலரை திருவோணம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

News June 12, 2024

தஞ்சை: உரிமை கோராத 26 உடல்கள் அடக்கம்

image

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதரவின்றி சிகிச்சை பெற்ற நோயாளிகள் இறந்த பின்னரும், அவர்களது உடலை உரிமை கோர யாரும் வராத நிலையில் அவை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 26 உடல்களையும் நேற்று(ஜூன் 11) ராஜகோரி மயானத்தில் காவல்துறை, அரசு மருத்துவக் மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News June 12, 2024

ஒரத்தநாடு: இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

image

மின்வாரிய உதவி பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(ஜீன் 12) ஈச்சங்கோட்டை, மருங்குளம், நடுவூர், சூரியம்பட்டி, வேங்குராயன்குடிகாடு, வடக்கூர், கொல்லங்கரை, சாமிப்பட்டி, பாச்சூர், துறையூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

News June 11, 2024

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாக கூட்டரங்கில், நேற்று(ஜூன் 10) நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை அவையங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News June 10, 2024

தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை அவையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் இன்று(ஜூன் 10)வழங்கினார். இதில்     மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் இருந்தனர்.

News June 10, 2024

அஞ்சலக எனக்கு எண் முகாமை துவங்கி வைத்த ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று(ஜூன் 10)துவக்கி வைத்தார். இதில் மேசன் ராமநாதன், உதவி ஆட்சியர்(பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் பலர் இருந்தனர்.

News June 10, 2024

கோமாரி நோய் தடுப்பு ஊசி சிறப்பு முகாமினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை திருமலை சமுத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தனர். ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாமினை விவசாயிகள் பயன்படுத்தி கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!