Thanjavur

News May 28, 2024

தஞ்சை அருகே விபத்து- 10 பேர் காயம்

image

பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று 2தனியார் பேருந்துகள் பயணிகளுடன் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றது. பயணிகளை அதிகமாக ஏற்றுவது என்பதில் இரு பேருந்து டிரைவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சோழகன் குடிக்காடு அருகே சென்ற போது பின்வந்த பேருந்து, முன் சென்ற பேருந்தின் மீது மோதியது. இதில் 10 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News May 27, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரிய அலுவலர்கள் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் கணினி மையத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (27.5.24) நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

News May 27, 2024

தஞ்சாவூரின் கம்பீரமான அரண்மனையின் குறிப்பு!

image

தஞ்சாவூர் அரண்மனை கிபி 1550இல் மராத்தியர் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது. அரண்மனை பெரியக்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோட்டை 110 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை நாயக்கர்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை, ஒரு நூலகம், அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.

News May 26, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

image

நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டுதல் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

News May 25, 2024

தஞ்சாவூர் மனோரா கோட்டையின் குறிப்பு!

image

தஞ்சாவூரில் உள்ள மனோரா கோட்டை, 1814இல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில் தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார். இந்த மனோரா நினைவு சின்னம் எட்டு மாடி அறுகோணவடிவ கோபுர அமைப்புடையது. 2004இல் ஏற்பட்ட சுனாமியில் கோட்டை உட்பட ஐந்து நினைவுச் சின்னங்கள் சேதமடைந்தன. 2007 ல் இது, தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரால் புனரமைக்கப்பட்டது.

News May 24, 2024

தஞ்சை: தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

கும்பகோணம் தேப்பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டட வேலையில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த வெங்கடேசன்(30) என்பவர் வேலை செய்யும் போது தடுமாறி அருகில் சென்ற மின்கம்பி மீது விழுந்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌. நிச்சயதார்த்தம் நடந்து திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் வெங்கடேஷன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 24, 2024

நான் முதல்வன் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்

image

ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாணாக்கர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 1,00,443 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

News May 24, 2024

தஞ்சை காவலர்களுக்கு வெகுமதி

image

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் டேவிட், சச்சிதானந்தம் மற்றும் காவலர்கள் அருண்குமார், சுரேந்திரன், சிம்ரான், முத்துக்குமார் ஆகியோர்கள் கொண்ட தனிப்படையினர் 25 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிசுத்தொகை வழங்கி வெகுவாக பாராட்டினார்.

News May 23, 2024

கடத்தல் வாகனம் ஏலம் – உரிமை கோர கால அவகாசம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பண்டங்களை லாபநோக்கில் விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட வழக்கில் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை யாரும் உரிமை கோராததால் ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி உள்ள வாகனங்கள் தங்களுடையது என்று கருதினால் அசல் ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலகத்தை அனுக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

தஞ்சை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இதற்கு 1லட்சம் ரொக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தாண்டு அவ்விருதிணை பெற தகுதியுடைய இளைஞர்கள் www.sdar.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். 

error: Content is protected !!