Thanjavur

News August 6, 2024

தஞ்சையில் அக்காவை கொலை செய்த தம்பி கைது

image

மானோஜிப்பட்டியை சேர்ந்த உமா தனது வீட்டிலேயே உணவகம் நடத்தி வருகிறார். இவர் சகோதரர் சிவக்குமார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். உமா தனது தம்பியை அதிகமாக வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தமடைந்த அவர் உணவகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்காவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

News August 6, 2024

தஞ்சையில் இன்று மின்தடை

image

தஞ்சை உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குதிரைகட்டி தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, வேலூர் தெரு, சருக்கை தெரு, சுந்தரம் பிள்ளை தெரு, பரத் நகர், வாணிய தெரு, ராஜாராம் மடதெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி தஞ்சாவூரில் 7 மி.மீ, திருவையாறு 39 மி.மீ, பூதலூர் 36.80 மி.மீ, ஒரத்தநாடு 13.10 மி.மீ, வெட்டிக்காடு 26.80 மி.மீ, அய்யம்பேட்டை 22 மி.மீ, திருவிடைமருதூர் 29.40 மி.மீ, பட்டுக்கோட்டை 2 மி.மீ, அதிராம்பட்டினம் 7.10 மி.மீ, மதுக்கூர் 1.40 மிமீ, கும்பகோணம் 4 மி.மீ, பாபநாசம் 2 மி.மீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 260.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News August 5, 2024

தஞ்சை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்

image

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் நேற்று அரசு பேருந்து செல்லும் போது மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் நடத்துனர் தினசீலன் ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டு பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட சாரதி, முருகன், விஜய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News August 5, 2024

தஞ்சை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.

News August 4, 2024

வயநாட்டிற்கு சென்ற தஞ்சை நபரை மீட்க கோரிக்கை

image

பாபநாசம் அருகே சோளகநத்தம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும் அவரை பற்றி அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஷேர் செய்யவும்

News August 4, 2024

தஞ்சை அருகே 150 செம்மறி ஆடுகள் திருட்டு

image

பின்னையூர் சேகர் என்பவர் விளைநிலங்களில் ஆடு கிடை போடும் தொழிழில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி ஆடுகளை பாதுகாக்க அங்கேயே உறங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் சேகரை கடுமையாக தாக்கி விட்டு 10 லட்சம் மதிப்புள்ள 150 செம்மறி ஆடுகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 4, 2024

பெவிகால் பட்ஜெட்: பாஜக மீது வீரமணி சாடல்

image

திருச்சி சிறுகனூரில் ரூ 108 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் பன்முக சிறப்புகளை உருவாக்க இருக்கும் பெரியார் உலகம் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் பெரியாரை உலகமயமாக்குவோம் உலகத்தை பெரியார் மயமாக்குவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக ஆட்சியை காப்பாற்ற பெவிகால் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது என திராவிடகழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் தெரிவித்தார்.

News August 4, 2024

திருபுவனம் கைத்தறி பட்டு சங்கம் அறிவிப்பு

image

தமிழ்நாடு கைத்தறி இயக்குநர்களால் விருது தேர்வு ஜூலை 30ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி நாடெங்கிலும் உள்ள திறமைமிக்க நெசவாளர்கள் 60பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 10வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு சென்னை, எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் தேசிய கைத்தறி நாள் விழாவில் 60 திறன்மிகு நெசவாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்.

News August 4, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட பிற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

error: Content is protected !!