India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையில் பல்வேறு புகார் மனுக்களை பொதுமக்கள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சிவ.செந்தில்குமார், ஜெகதீசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதம்தோறும் 3ஆவது வெள்ளிக்கிழமை சிறு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். இதேபோல் வருகிற 21ஆம் தேதி சிறு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தஞ்சாவூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெருமாறு மாவட்ட ஆட்சியார் அறிவித்துள்ளார்.
தஞ்சை: மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக்ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிடத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தஞ்சை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தண்ணீர் இல்லாமல் போனதுக்கு என்ன காரணம் குறித்து மத்திய, மாநில அரசுகல் ஆராய வேண்டும் என்றும், கடந்தாண்டு முதல் ஏறத்தாழ 90 TMC-க்கு மேல் தண்ணீர் பாக்கி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அண்ணா கூடைப்பந்து கழகம் (ANNA BASKETBALL CLUB), மகாமகம் கூடைப்பந்து கழகம் (MAHAMAHAM BASKETBALL CLUB ) இணைந்து நடத்தும் கூடைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மருத்துவகல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், “மாவட்டத்திலுள்ள சுகாதார களப்பணியாளர்கள் மற்றும் 77 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மூலம் நீரிழிவு நோயாளிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 1,75,000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 3,000 பேருக்கு காலில் புண் ஏற்படுவதற்கான அறிகுறிகளும், 2,500 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது” என தெரிவித்தார்.
திருவாரூரை சேர்ந்த ராமையன் (60), ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மின்சார வாரிய ஊழியர்கள் மரத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனர். அதனால் அங்கு அவிழ்ந்து கிடந்த மின் கம்பி இருசக்கர வாகனத்தில் சிக்கி ராமையன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் சந்தன மாலை தயாரிப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் சந்தன மாலைகள் கைவினைப் கலைஞர்களால் நுணுக்கமான கலை படைப்புக்களுடன் மாலை உருவாக்கம் செய்யப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாலை தயாரிப்பு குறித்து நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
திருவையாறு 33 கிலோ வாட் துணை மின்நிலையம் (ம) மேலத்திருப்பந்துருத்தியில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் உள்ளிட்ட பகுதியில் இன்று(15.6.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.