Thanjavur

News August 21, 2024

தஞ்சை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான De-Addiction Centre அலுவலகத்தில் 3 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 20, 2024

சுந்தர பெருமாள் கோவில் ரயில்வே கேட்டில் விபத்து

image

பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் ரயில்வே கேட்டில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மோதியதில் ரயில்வே மின்சார கம்பி அறுந்து சேதமடைந்தது. இதனால் ஆந்திரா கச்சிகுடாவிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் பாபநாசம் ரயில் நிலையத்திலும், சேலத்தில் இருந்து மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பண்டாரவாடை ரயில் நிலையத்திலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

News August 20, 2024

தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆழமான பகுதிகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆழமான பகுதிக்கு செல்லாமல் பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 20, 2024

தபால் துறையில் உத்தேச பட்டியல் வெளியீடு

image

நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 236 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

News August 20, 2024

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

image

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 4ஆம் தேதியும், தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வரும் 5ஆம் தேதியும், காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி வருகிற 6ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. மேலும் தலைப்பு, குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலம் அறிவிக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 19, 2024

தஞ்சையில் நாளை முதல்வர் திறப்பு: ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக நாளை காலை கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் கும்பகோணத்தில் உதவி இயக்குனர் நிர்வாக அலுவலக கட்டடமும் – கால்நடை மருத்துவமனை கட்டடமும் (ம) பட்டுக்கோட்டை பெருமகளூரில் கால்நடை மருந்தக கட்டிடமும் (ம) ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆய்வக விலங்கினக் கூடம் போன்று பல்வேறு கட்டடங்களை திறந்து வைக்கிறார் என தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

சுவாச கருவி வழங்கிய கலெக்டர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் ஒன்றியம் விளார் பகுதியினை சேர்ந்த துளசி என்பவர் தனக்கு சுவாச கருவி வேண்டி விண்ணப்பத்தை தொடர்ந்து அவரது தாயார் ஞானவள்ளியிடம் சுவாச கருவியினை வழங்கினார்.

News August 19, 2024

தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

image

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவிப்பின்படி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சந்திரசேகர மூப்பனார் தஞ்சை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ,‌ மாநகர, வட்டார, சார்பு அணி, பேரூர் நிர்வாகிகள் பட்டியலை இன்று கும்பகோணம் மூப்பனார் பங்களா அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது மாநில உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ராஜாங்கம், தஞ்சை கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.சங்கர் உடன் இருந்தனர்.

News August 19, 2024

தஞ்சை ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

image

கடந்த 2018-ஆம் ஆண்டு கும்பகோணம் கோயில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் , இதுவரை குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கடுமையாக சாடியதோடு, வரும் ஆக.28-ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

News August 19, 2024

432 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 432 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கினர்.

error: Content is protected !!