Thanjavur

News September 26, 2024

ஒரத்தநாடு அருகே 5 பேர் கைது

image

ஒரத்தநாடு கே திருவோணம் காவல் சரகத்திற்கு உட்பட்ட தோப்பு நாயம் கிராமத்தில் கண்ணன் என்பவர் கூரை வீட்டில் வீட்டில் ரூ.75,000 பணம் வைத்து சூதாடிய ஐந்து நபரை திருவோணம் சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அமேலும் அவர்களிடம் 75 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News September 26, 2024

கரந்தையில் ரவுடி வெட்டி படுகொலை

image

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். காவல் துறையின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு கரந்தை புற்றுமாரியம்மன் கோயில் அருகே அறிவழகன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பின்னர் உடலை கைப்பற்றி கிழக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 25, 2024

பட்டுக்கோட்டையில் வருவாய் துறையினர் ஆய்வு

image

தீபாவளிக்கு இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 41 பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். போதுமான மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள்,
தீத்தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதா? அவசர காலத்தில் வெளியேற கூடிய அவசர வழி உள்ளதா? உள்ளிட்ட 18 விதிமுறைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

News September 25, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற செப்.27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் (ம) புகாரை தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

News September 25, 2024

தஞ்சைக்கு வந்த 1,250 டன் உரம்

image

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சாகுபடி பணிகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து 1,250 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி, சூப்பர் உரம் ஆகியவை 21 வேகன்களில் தஞ்சைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் உரை மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News September 25, 2024

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கும்பகோணத்தை அடுத்த உடையாளூா் மண்டபமேடு காலனி தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(25). தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், இவா் 17 வயதான மனநலம் பாதித்த சிறுமிக்கு கடந்த 16-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் போலீஸாா், ஜெகதீசன் மீது போக்சோ வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

News September 24, 2024

ரூ.21 லட்சத்தை ஒப்படைத்த பெண்

image

திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த காமராஜ் என்பவர் கடந்த 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது ரூ.21 லட்சம் ரொக்கத்தை தொலைத்துள்ளார். இதுகுறித்து மருவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நடுக்கடையை சேர்ந்த மங்கையரசி என்ற பெண் ரூ.21 லட்சம் தன்னிடம் இருப்பதாக தானாக முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை காவலர்கள் வெகுவாக பாராட்டினர்.

News September 24, 2024

உர கட்டுப்பாடு ஆய்வகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் சாக்கோட்டையில் இயங்கி வரும் உரக் கட்டுப்பாடு ஆய்வகத்திற்கு தேசிய தர நிர்ணயம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து இன்று‌ பெற்றனர்.

News September 24, 2024

தஞ்சை மாவட்ட மக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

வீடுகளில் நூலகங்கள் அமைத்து அதை பராமரித்து பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது மற்றும் கேடயங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்தில் சிறந்த வீட்டு நூலகத்திற்கான விருது பெற தகுதி உடையவர்கள் வரும் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் dlotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

565 மனுக்களை பெற்று கொண்ட தஞ்சை ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பட்டா கல்வி கடன் முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை மாற்றுத்திறனாளிகள் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 565 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!