India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 30ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தனுசியா கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி அருணாச்சலம் குமரிக்கும், செங்கல்பட்டில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்த அருண்மொழி அரசு திருவையாருக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 30ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் வருகிற ஆகஸ்ட்31ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி, தொண்டராம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் துரை. சந்திரசேகரன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.. முரசொலி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒன்றிய கழகச் செயலாளர், கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 2 சமுதாய அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. ஏதேனும் பட்டம் பெற்று, கணிப்பொறி திறன் பெற்றவராகவும், 35 வயதிற்குள் உள்ள தகுதி உடையவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் கேட்டுள்ளார்.
பேராவூரணி அடுத்த ரெட்டைவயல் கிராமம் அருகே நேற்று, இருசக்கர வாகனம் மோதி தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சுபபிரியா உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுபபிரியா உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 12 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். மேலும், இந்த போட்டிகளில் பங்கு கொள்வதற்கு https://sdat.tn.gon.in என்ற இணையதளத்தில் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சிறப்புத் திட்ட முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.75,000 மதிப்பில், குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை 3 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்.
தஞ்சையில் ஆவணி மாதத்தின் தொடர் முகூர்த்தம் மற்றும் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை ஆன மல்லிகை இன்று 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1,000 ரூபாய்க்கும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 300 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், ஆப்பிள் ரோஸ் கிலோ 150 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.