India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று இரவு 10 மணி முதல் (டிச. 3) அதிகாலை 2 மணி வரையிலும், டிச.3 காலை 2 மணி முதல் 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9884042100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்தவையா என்பதை விசாரித்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட ஆட்சித்தலைவர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மத்திய மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெற்றிட திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு” கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் சிறுபான்மை இன சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டார்.
மாநில மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தென்காசி மாவட்ட பள்ளிகள் அளவில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் காந்தி கிராமம் அறக்கட்டளை சாந்தி செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நேற்று(டிச.,1) நடைபெற்றன. போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்குகிறார்.
தென்காசி மாவட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சிவகிரியில் 10 மில்லி மீட்டர் மழை, தென்காசியில் 8 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 20.20 மில்லி மீட்டர் ,ஆய்க்குடியில் 10.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று(டிச.,1) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், சோமவார 3வது திங்கள் கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் நபர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று(டிச.1) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், திங்கள் கிழமை சோமவார 3வது திங்கட்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் நபர்கள் மிக எச்சரிக்கையுடன் கவனத்துடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 4 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரண்டு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தென்காசி மற்றும் ஆலங்குளம் புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ஜெயபால் பர்னபாஸ் தமிழ் இனியன் அறிவழகன் வெங்கடேஷ் ஆகியோர் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர உதவிக்கு 04633295455,9884042100,100, ஆகிய எண்கள் தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று(நவ.30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.