India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமானது மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 14) செய்தி வெளியிட்டுள்ளார். SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 14.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் 6 அடி உயர திருமேனியுடன் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து தனது இடது கையால் சர்ப்பத்தின் தலையை பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோவிலின் ஐதீகம். *ஷேர் பண்ணுங்க*
தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 31 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஜெனரிக் சித்தா ஆயுர்வேதம் என அனைத்து வகை மருந்துகளும் சந்தை விலையை விட 20 முதல் 90% வரை குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும் 25 சதவீதம் வரை கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் சட்ட பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதில், தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூரில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்காக நிதி ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். *தென்காசி மாவட்டத்தின் புதிய வருகையை மக்களுக்கு ஷேர் செய்து தெரியபடுத்தவும்*
தென்காசி அணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி(27) என்ஜினியரிங் பட்டதாரியான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர்கள் திருமண வயதாகிறது வேலை ஏதாவது பார்த்தால் தான் பெண் பார்க்க முடியும் என கூறியதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று மதியம் தனது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு மணிபாரதி சென்று கதவை பூட்டி கொண்ட நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் பகுதிநேர யோகா பயிற்சிவிப்பாளர் பதவிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மார்ச்.28 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இயன் முறை மருத்துவர் ஒலியியல் நிபுணர் & பேச்சு சிகிச்சை நிபுணர் உளவியலாளர் மற்றும் ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளோர் விண்ணப்ப படிவங்களை <
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த சிவகிரி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.