India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில் எண் 16846 செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் (07.01.2025) அன்று செங்கோட்டையில் இருந்து 05.00 மணிக்குப் புறப்படும் என்றும் செங்கோட்டை- கரூர் இடையே பகுதியாக ரயில் சேவையானது ரத்து செய்யப்படும் என்றும் இந்த ரயில் கரூரில் இருந்து 13.30 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இத்தேதியில் பயணத்தை மேற்கொள்பவர்கள் கவனித்து பயணிக்கவும்.
ஜனவரி 4, 7,9,11 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரை இதுவரை சென்ற வழித்தடத்திலும், அதற்கு பின்பு மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக மயிலாடுதுறை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் இச்செய்தியை கவனித்து பயணத்தை மேற்கொள்ளவும்.
ஜனவரி 11, 2025 அன்று கொல்லத்திலிருந்து காலை 05.00 மணிக்கு புறப்படும் ரயில் எண் 07176 கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக திருப்பி விடப்படும், இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் நிறுத்தங்கள் தவிர்க்கப்படும். மானாமதுரையில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும் என ரயில்வே செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தேசிய நல குழுமம் திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் விருப்பமுள்ளவர்கள் வருகிற 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலக அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறு இன்று(ஜன.2) கேட்டுக் கொள்ளப்பட்டது . நண்பர்களுக்கு பகிருங்கள்
தென்காசி மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வாகன போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டதாக 1,420 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 756 பேர் மீதும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பொதுமக்களுடன் இனிப்புகள் வழங்கி கோலாலமாக கொண்டாடி புத்தாண்டு வரவேற்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வாக்கி டாக்கி மூலமாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்தார்.
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் அருள் தரும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் புத்தாண்டு சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் தீபாராதனைகள் ஆகியவை நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் அளித்த புது ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பிரதான சாலையில், குற்றாலத்திலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற இன்னோவா கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரதீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த இருவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று(ஜன.02) காலை 11 மணி அளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான நுகர்வோர் முனையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கமல் கிஷோர் திறந்து வைக்க உள்ளார். இந்த தகவல் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.