Tenkasi

News January 5, 2025

ஆலங்குளத்தில் மீன் பாசி மகசூல் ஏல குத்தகை!

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளங்களில் இந்த வருடத்துக்கான மீன் பாசி மகசூல் குத்தகை ஏலம் ஜனவரி 9,10 ஆகிய தேதிகளில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கல்யாண ராமசுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கலந்து கொள்பவர்கள் ஜி.எஸ்.டி. சான்றிதழ் மற்றும் ரூ.1000 வைப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம்.

News January 5, 2025

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்! இன்று ஆரம்பம்

image

பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜன.12,19,26 தேதிகளில் நெல்லையிலிருந்து பகல் 3.30 மணிக்கும், ஜன.13,20,27 தேதிகளில் தாம்பரத்திலிருந்து பகல் 3.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படுகிறது. நெல்லையிலிருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் தடத்தில் இயக்கப்படுகிறது. இன்று(ஜன.5) காலை 8 மணிக்கு முன்பதிவு  தொடங்குகிறது.

News January 5, 2025

தென்காசி மாவட்ட காவல் ரோந்து பணி விபரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2025

குற்றாலத்தில் தொடங்கியது திருவாதிரை திருவிழா

image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுக்கு 3 திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருவாதிரை திருவிழா இன்று(ஜனவரி 4) காலை 5:20 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News January 3, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

தென்காசி அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு

image

தென்காசி மாவட்டத்தில்உள்ள அணைகளில் இருந்து இன்றுநீர் வெளியேற்றும் நிலவரம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணையிலிருந்து வினாடிக்கு 120 கன அடி நீர், ராம நதி அணையிலிருந்து வினாடிக்கு 40 கன அடி நீர், கருப்பாநதி அணையில் இருந்து வினாடிக்கு 15 கன அடி நீர், குண்டாறு அணையில் இருந்து வினாடிக்கு 21 கன அடி நீர், அட விநயினார் அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News January 3, 2025

தென்காசியில் நாதகவினர் 42 பேர் கைது

image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று (ஜன.02) மாலை தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாதகவினர் 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 3, 2025

தென்காசி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் வானவில் மன்றம்

image

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுத்து நடத்தும் வானவில் மன்றம் செயல்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நாளை (ஜன.04) தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என பத்து பள்ளிகளில் நடைபெற உள்ளது.10 ஒன்றியங்களில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் சென்று நடத்துவர்.

News January 3, 2025

ஆலங்குளம் பகுதி மக்களுக்கு ராமராஜன் நன்றி தெரிவிப்பு

image

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ராமராஜன். இவர் கரகாட்டக்காரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் நடித்து தற்போது வெளிவந்த படம் சாமானியன் ஆலங்குளம் தனியார் தியேட்டரில் 116 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இதற்காக ஆலங்குளம் சுற்றுவட்டார மக்களுக்குராமராஜன் நேற்று(ஜன.2) நன்றி தெரிவித்தார்.

News January 3, 2025

தென்காசியில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

image

தென்காசி மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று (ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

error: Content is protected !!