Tenkasi

News March 28, 2025

தென்காசி மாவட்டத்தில் இன்று வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு இயல்பை விட இன்று(மார்ச் 28) 3°C வெப்பநிலை அதிகரித்து வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 100°F வெப்பநிலையை தாண்டி வெயில் பதிவாகும். எனவே மதிய வேளையில் முதியோர்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், வெளியில் செல்லும் தேவை ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News March 28, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*

News March 27, 2025

கைவினைக் கலைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று (மார்ச்-26) வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர் கைவினைத் திட்டத்தில் கட்டட வேலைகள் மர வேலைப்பாடுகள் உள்ளிட்ட 25 வகையான கைவினை தொழில்களுக்கு தொழில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>> செய்யவும். கைவினை கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் . *மற்றவர்களுக்கும் ஷேர் செய்வும்*

News March 27, 2025

சிவசைலம் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டத்தில் மார்ச் 29ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பங்கேற்க உள்ளார். எனவே, அனைத்து ஊராட்சி பொதுமக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஊராட்சி தலைவர் மலர் மதி சங்கர பாண்டியன் இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 27, 2025

அந்த தியாகி யார்? போஸ்டரால் பரபரப்பு

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதி முழுவதும் அந்த தியாகி யார்? போஸ்டரால் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டம் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த போஸ்டரால் சங்கரன்கோவில் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

News March 27, 2025

கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்: ஹரி நாடார்

image

சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் நேற்று(மார்ச் 26) ஆலங்குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், நாடார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையான பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வழங்குவதை அதிமுக ஆட்சிக் காலத்திலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கையாக வைத்து வருகிறோம். இதனை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

News March 27, 2025

ரூ.1,000 கோடி அமுக்கிய தியாகி யார்?..போஸ்டரால் பரபரப்பு!

image

தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்றுப் பகுதிகளில், தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ரூ.1000 கொடுப்பதுபோல கொடுத்து, ரூ.1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. திடீரென ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சோதனை செய்து கூறியது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

ஒலியியல்&பேச்சு சிகிச்சை நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு ஒலியியல் நிபுணர் & பேச்சு சிகிச்சை நிபுணர் பணிக்கு நாளை மறுநாள் (மார்ச்-28) விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் மொழி நோயியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியம் 23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!