India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக் கோவில்தான் சித்திரசபை கோவில். குற்றாலநாதர் கோவிலுக்கு வடபகுதியில் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது. திருவாதிரை திருவிழாவின்போது இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்கி , குடும்பத்தினர் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
தென்காசி மாவட்டம் கீழ கடையத்தை சேர்ந்த அன்னை இந்திரா மகளிர் சுய உதவி குழு தலைவி சீதாலட்சுமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது பாரத ஸ்டேட் வங்கியில் சுவாமித்வ திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதனைக் காலம் தாழ்த்தாமல் விரைவில் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண அட்டைகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணையதளம் வாயிலாக இனி வரும் நாட்களில் வழங்க வேண்டியுள்ளதால், தென்காசி மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏற்கனவே பெற்றுள்ள LAL1620T சலுகை அட்டையினை 30-06-2025 வரை பயன்படுத்தி கட்டணமில்லா பயணச்சலுவையினை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் இன்று அறிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் புதியதாக கண்டறியப்பட்ட கடனாநதி அணை முதல் ராமநதி அணை வரையிலான வழித்தடத்திற்கு மினி பஸ் இயக்கலாம். இதற்காக விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு உடற்கல்வி வழிகாட்டுதல் முகாம் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிளஸ் டூ முடித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். *ஷேர் பண்ணுங்க*
கடையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் கடையம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அங்கிருந்த வியாபாரிகள் மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் திருக்குற்றாலநாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், தென்பழனி ஆண்டவர் கோயில், சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில், சாயமலை உமையொருபாகேஸ்வரர் கோயில், தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில், சாம்பவர் வடகரை மதுரவாணி அம்பாள் கோயில், வைத்தியலிங்கம் கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயிலாகும். *ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குவாரிகளிலிருந்து நாள்தோறும் கனரக லாரிகள் மூலம் அரசின் விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லாரியில் செல்லும் வழியில் கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் ரயிலுக்காக மூடப்படும் போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அணிவகுத்து வரிசையாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் மாம்பழம், எலுமிச்சை, வாழைப்பழம், தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இப்பகுதிகளில் அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் கடுமையான இழப்புகளை விவசாயிகள் சந்திக்கின்றனர். இதனை தடுப்பதற்காக தென்காசியில் உணவு பதப்படுத்தும் கிளஸ்டர் அமைக்க வேண்டும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேற்று(மார்ச் 27) மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.