Tenkasi

News April 18, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட பி. எம். கிசான் திட்டவிவசாயிகள், இதர விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான திட்டங்களின் பயன்களை எளிதாக பெற ஆதார் எண் , நில உடைமை விபரங்களை சரிபார்த்து தனி அடையாள எண் வழங்க கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது ஏப்.30 க்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் உரிய விபரங்களை கொடுத்து பதிவு செய்ய ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ள

News April 18, 2025

தென்காசி மக்களுக்கு சூப்பர் APP

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை, மருத்துவ உதவி உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க் <<>>மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 18, 2025

காதல் திருமணம் செய்தவர் தந்தை மீது தாக்குதல்

image

கடையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் முப்புடாதி (25) இவர் கீழ கடையம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் முப்புடாதியின் தந்தையை அவதூறாக பேசி அடித்து தாக்கினர் .இதுகுறித்து சுந்தரம் அளித்த புகார் அடிப்படையில் பெண்ணின் உறவினர்கள் பாலா ,ஷங்கர் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர் ஒருவரை தேடி வருகின்றனர்.

News April 17, 2025

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை அனுப்ப மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை மாநில ஆணையர், எண்.05, காமராஜர் சாலை, லேடி வெலிங்கடன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ (30.04.2025) ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499933236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

தென்காசியில் கோடைகால பயிற்சி முகாம் 

image

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04633-212580 / 86100 37399 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

புளியங்குடி அருகே யோகா மாஸ்டர் மர்ம சாவு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள இருமன்குளத்தை சேர்ந்தவர் மருதையா என்ற யோகா மருதையா (50). யோகா மாஸ்டரான இவர் நேற்றிரவு புதிய வீடு கட்டும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

News April 17, 2025

தென்காசி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1070
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462 –2501035
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

News April 17, 2025

கடையம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிள்ளை குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகள் ஜோதி தர்ஷினி (17) 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது தனது அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் பார்த்தபோது இறந்து கிடந்தார். கடையம் போலீசார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2025

தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

image

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தென்காசி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

error: Content is protected !!