Tenkasi

News May 7, 2025

இலஞ்சி கோயிலில் சித்திரை கொடியேற்ற விழா

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி வரலாற்று சிறப்புமிக்க திருவிளஞ்சி குமாரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களை மிக முக்கிய திருவிழாவான சித்திரை பெரும் திருவிழா இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

News May 7, 2025

திருமண புத்திர தோஷம் இருப்பவர்கள் எங்கே செல்ல வேண்டும் தெரியுமா

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமிளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி நீளா வெங்கடாஜலபதியைபோன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் “கறிவேப்பிலைசாதம், வழங்குவார்கள்

News May 7, 2025

தென்காசி மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️தென்காசிகலெக்டர்- 04633-290547.
▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 04633-290548.
▶️மாவட்ட வருவாய் அலுவலா்- 004633-290546.
▶️தனித்துணை ஆட்சியர்-04633-290548.
▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 04633-212114.
தென்காசி மக்களே இது போன்ற முக்கிய எண்களை தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News May 7, 2025

விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.

News May 7, 2025

விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.

News May 7, 2025

தென்காசி : முருகனால் உருவான முக்கன் பெயர்

image

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருமலைக்கோயில். இங்கு கோவில் அமைக்கப்படும் போது, முருகப்பெருமானின் திருமேனியில் கோடாரிபட்டு மூக்கில் தழும்பு ஏற்பட்டது. அது அழகாக இருந்ததால் மூக்கன் என அழைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காண்டி என்ற பெயர்களும், பெண் குழந்தைகளுக்கு மூக்கம்மாள் என்ற பெயர்களும் வைக்கின்ற வழக்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.

News May 7, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம், சமூக வலைதளத்தில் இன்று ஸ்கேம் அலர்ட் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு உடனடி நிதி உதவி தேவை என பொய்யான மோசடி செய்தி பரவுவதாக எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய மோசடி செய்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்திற்குரிய செய்திகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News May 7, 2025

தென்காசி மாவட்ட அணைகள் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 47 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2 கன அடி நீர் வருகிறது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடி. 4 கன அடி நீர் வருகிறது. 10 கண அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி நீர் இருப்பு 24 அடி. நீர் வரத்து இல்லை குண்டாறு அணை நீர் இருப்பு 23 அடி. அடவிநாயனார் அணை நீர் இருப்பு 21 அடியாக உள்ளது.

News May 7, 2025

திருமணத்தடை நீங்க எங்கே செல்ல வேண்டும் தெரியுமா

image

கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலானது கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பால்வண்ண நாதர் கோயில் அதன் முக்கியத்துவத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சமமாக கருதப்படுகிறது. சங்கரன்கோவிலை சுற்றி அமைந்துள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில்கள் ஐந்து முக்கிய கூறுகளை குறிக்கின்றன: நிலம், நீர், காற்றுவானம் மற்றும் நெருப்பு. என்று குறிக்கிறது

News May 7, 2025

தென்காசி: அரசு பேருந்து டெப்போ கிளை மேலாளர்கள் புகார் எண்கள்

image

தென்காசி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கிளை மேலாளர்கள் அலுவலர்கள் எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் (வணிகம்) – 9487599053
▶️ சங்கரன்கோவில் – 9487599062
▶️ புளியங்குடி – 9487599061
▶️ தென்காசி – 9487599060
▶️ பாபநாசம் – 9487599059
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை என்றாலோ, பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!