India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி நகர் பகுதிக்கு உட்பட்ட காளிதாசன் நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நான்காவது ஆண்டு விழா வருகின்ற 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் நகர் மன்ற தலைவர் சாதிர் பங்கேற்கிறார். சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி புகழும் நடிகருமான ஈரோடு மகேஷ் பங்கேற்க உள்ளார். இது தொடர்பான விளம்பர பதாகை பல்வேறு நபர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று(பிப்.26)கடனா அணை உச்சநீர்மட்டம்: 85 அடி, நீர் இருப்பு: 47 அடி. ராமநதி உச்ச நீர்மட்டம்: 84 அடி, நீர் இருப்பு: 42 அடி. கருப்பா நதி உச்ச நீர்மட்டம் 72 அடி, நீர் இருப்பு: 41.34 அடி. குண்டாறு உச்ச நீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 28.62 அடி. அடவிநயினார் அணை உச்ச நீர்மட்டம்: 132 அடி, நீர் இருப்பு: 52.25 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலங்களிலும், சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டமானது நாளை (26.2.25) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு புதிய கணக்கை தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. SHARE IT.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (பிப்-25ம்) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை பரிந்துரைப்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் தாக்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பகல் நேர வெப்ப பதிவு உயர்ந்து வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் நாளை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ‘தென்காசி வெதர்மேன்’ தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா பதிவிட்டுள்ளார். காற்று முறிவு காரணமாக நாளை மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் (ம) மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளது. மார்ச் 8 காலை 9 மணி to மாலை 3 மணி வரை ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை இதில் கலந்து கொண்டு பயனடையலாம். SHARE IT.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (24.2.25)புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம் போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களுக்கு தேவையான உதவிகள், குறைகளை மேற்கண்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தென்காசி மாவட்டத்தில் ரயில் நிலையங்களில் உள்ள இந்தி பெயர்களை அழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் MLA ராஜா உள்ளிட்ட 19 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.