India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ளது சிவசைலம் கோயில். மிகப்பெரிய பழைமையான சிவன் கோயிலாகும்.இங்கு சிவன் மேற்கு திசையில் இருந்து தலையில் சடை முடியுடன் பக்தர்களுக்கு சுயம்புலிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார். உடனுறை பரமகல்யாணி அம்பாளும் பக்தர்களுக்கு கட்சி தருகின்றனர். இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். SHARE IT
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பாசிரியர் பிரான்சிஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அளித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் நேற்று இரவு (மார்ச்-2) அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகள், மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சூழல் என அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் நோ! நோ! நோ! என்ற ஆங்கில எழுத்துடன் மாப்ள சொன்னா கேளு வேண்டாம், என்பதுடன் கை விலங்கு படமும் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் என்ன கருத்தை சொல்ல வருகின்றது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடையநல்லூரில் வரும் 14ஆம் தேதி, சங்கரன்கோவிலில் மார்ச் 21ஆம் தேதி, தென்காசி கோட்ட அலுவலகத்தில் 25ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் இன்று(மார்ச் 3) காலை 7 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கடனா அணை பகுதியில் 131 மில்லி மீட்டர் மழை பதிவானது. ராமநதி அணை பகுதியில் 65 மில்லி மீட்டர் மழை பெய்தது. செங்கோட்டை 18, தென்காசி 19, கருப்பாநிதி அணை 16, ஆயக்குடி 15, சங்கரன்கோவில் 12, குண்டாறு அணை 10.40, சிவகிரி 8, அடவி நயினார் கோயில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நேற்று(மார்ச் 2) நாதக சார்பில் கனிம வளங்கள் கேரளா கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த சீமான், 2026ம் ஆண்டு நடைபெறும் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக 2024ல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் கௌசிக் பாண்டியன் என்பவரை அறிவித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொய்கை ஊராட்சி சின்னத்தம்பி நாடானூர் கிராமத்திற்கு வடபுறம் உள்ள சித்திர புத்திர ஊரணி குளத்தில் பிறந்து சில நாட்களான பச்சிளங்குழந்தை கிடப்பதை நேற்று பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் ஆடிவேல் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். புதரில் குழந்தை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி சின்னத்தம்பிநாடாரூர் கிராமத்திற்கு வடபுறம் உள்ள சித்திர புத்திர ஊரணி குளத்தில் பிறந்து சில நாட்களான பச்சிளங்குழந்தை கிடப்பதை நேற்று பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் ஆடிவேல் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 02.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து துத்திக்குளத்திற்கு மினிபஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று(மார்ச்.2) காலையில் துத்திக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் கவிழ்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.