India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் 2014ஆம் ஆண்டு பொன்னுமணி, குருசாமி முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும், மீதம் உள்ள 5 நபருக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதித்தும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்தும், நெல்லை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் வரும் அக்டோபர் 5ம் தேதி மஞ்சம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தகவல் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(செப்.27) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 04633213178, 95974-95097 எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஆயுஸ் டாக்டர், மல்டி பர்ப்பஸ் ஒர்க்கர் உள்ளிட்ட 6 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.09.24. தகுதியானவர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் 04633 213179, 95974 95097 என்று எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்கலாம். SHARE IT.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உயர் கல்வியில் சேரும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவையும் வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கடையநல்லூரில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்ற சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கடையநல்லூர் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் மதி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் விதமாக மாபெரும் விசாரணை முகாம் இன்று நடந்தது.
இதில் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அந்த உட்கோட்டங்களில் விசாரணை முகாம் ஏற்பாடு செய்து புகார்தாரர்களை விசாரித்தனர்.
குற்றாலம் அடுத்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி அவரது மகள் அருந்ததி ஆகியோர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விசாரணையில், ஜெயலட்சுமி தையல் வகுப்பில் இருந்து வந்து இறப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மகளுடன் சிரித்து பேசி உள்ளார். செல்போன் மூலம் கிடைத்த தகவலை அடுத்து இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடைய செல்போனை வைத்து விசாரணை நடைபெறுகிறது.
தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இரயில் நிலையங்களில், பயணிகள் வருகை மூலம்(2023-24) அதிக வருமானத்தை ஈட்டிய முதல் 100 ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தென்காசி ரயில் நிலையில் ரூ.21,92,58,146 வருமானம் ஈட்டி 51 ஆவது இடத்தில் உள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ரூ.1,30,92,37,818 கோடி வருமானம் ஈட்டி 12 ஆவது இடத்தில் உள்ளது.
குற்றாலம் அடுத்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி அவரது மகள் அருந்ததி ஆகியோர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விசாரணையில், ஜெயலட்சுமி தையல் வகுப்பில் இருந்து வந்து இறப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மகளுடன் சிரித்து பேசி உள்ளார். செல்போன் மூலம் கிடைத்த தகவலை அடுத்து இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடைய செல்போனை வைத்து விசாரணை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.