Tenkasi

News January 20, 2026

தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.

News January 20, 2026

தென்காசி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜனவரி 22) வியாழன் கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, உள்ளிட்ட சலுகைகள் பெற ஆட்சியர் அழைப்பு.

News January 19, 2026

தென்காசி: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை.
உங்க போன்ல புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன

image

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 386 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News January 19, 2026

தென்காசி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobstn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். *ஷேர் செய்தால் பிறருக்கு உதவும்.

News January 19, 2026

தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தென்காசி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

தென்காசி மாவட்ட பறவைகள் ஆர்வலர்களுக்கு வாய்ப்பு

image

தென்கசி மாவட்டத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை தாமிரபரணி, பாசன குளங்களின் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு 23ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆய்க்குடி ஜே பி கலை அறிவியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க ஆர்வம் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் http://forms.gle/2x4au4AubrJGZN8R7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News January 19, 2026

தென்காசி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தென்காசி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
⁍ஆலங்குளம்: 9445000390
⁍கடையநல்லூர்: 9445796455
⁍சங்கரன்கோவில்: 9445000382
⁍செங்கோட்டை: 9445000385
⁍சிவகிரி: 9445000385
⁍தென்காசி: 9498341043
⁍வீ.கே.புதூர்: 9445000389
⁍திருவேங்கடம்: 9498341044
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News January 19, 2026

பண்பொழி திருமலை கோயிலில் தைப்பூச திருவிழா விவரம்

image

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள திருமலை குமாரசாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி தைப்பூசத் திருநாள் கொண்டாடுவதை ஒட்டி ஜனவரி 23ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. இதுக்குறித்த பத்து நாள் திருவிழா அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News January 19, 2026

தென்காசியில் கடும் பனிப்பொழிவு

image

தென்காசி மாவட்டத்தின் மழையில்லாத நிலை நீடித்து வரும் நிலையில் இரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு காலை 8 மணி வரை இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் வயல்வெளிகளுக்குள் செல்வதற்கு தட்டுத்தெடுமாறி செல்லும் சூழல் ஏற்பட்டது.

error: Content is protected !!