India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுரண்டை அருகே அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் புளியங்குடி பகுதியை சேர்ந்த மாணவர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி வார்டன் மாணவரை பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் தாய் நேற்று(அக்.,3) சேர்ந்தமரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் ஐந்தாவது மற்றும் தென்காசி மாவட்ட கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கத்தின் முதலாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை 4:30 மணி அளவில் நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராணி ஸ்ரீகுமார், ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் முன்னிலையிலும் நேற்று (அக்.3) நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மருத்துவ செலவு தொகை மற்றும் ஈமக்கிரியை தொகை போன்றவற்றை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த 12 நபர்களுக்கு நேற்று (அக்.3) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் காவலர் சேமநலநிதி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.
தென்காசி வடக்கு மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த தென்காசி மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்துரைத்தார். கூட்டத்திற்கு மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன், தொண்டர் அணி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை, தென்காசி ரயில் பயணிகளுக்காக சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, புனலூர் வழியாக தூத்துக்குடி, திருநெல்வேலி, மும்பை இடையே தீபாவளி & சபரிமலை சிறப்பு இரயில் இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே பொது மேலாளருக்கு நேற்று(அக்.,2) தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் கடிதம் அனுப்பி உள்ளார்.
தென்காசி, ராயகிரி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிபவர் செல்வராஜ். கடந்த மாதம் இவரது காரை வழிமறித்த மர்ம நபர் செல்வராஜை சராமாரியாக வெட்டினார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், புளியங்குடியை சேர்ந்த ரவுடி ஷாஜி(46) என தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்தபோது அவர் தாக்கியதில் போலீசாரும் காயமடைந்தனர். தொடர்ந்து நேற்று(அக்.,2) ஷாஜி பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல்அதிகாலை 2 மணி வரையில்தென்காசி காவல்துறைதுணை கண்காணிப்பாளர் நாகசங்கர்மற்றும் ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் ஆகியோரும் அதிகாலை 2:00 மணி முதல் 6:00 மணி வரையில் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் ஆகியோரும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
04633295455, 9884042100 என்னில் அவசர தொடர்பு கொள்ளலாம்.
தென்காசியில் உள்ள காந்தி சிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று காலையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தென்காசியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நேற்று(அக்.,2) இரவு மதுரை வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் துணை முதல்வர் தங்கியிருந்த விடுதியில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.